Skip to main content

விருத்தாசலத்தில் குடிநீரில் விஷ மருந்து;பொதுமக்கள் பீதி!

Published on 15/08/2019 | Edited on 15/08/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த தெ.வ.புத்தூர்  கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.  அக்கிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் தனது மனைவி அஞ்சுகம் மற்றும்  நான்கு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் ரமேஷ் வீட்டில் அமைந்துள்ள ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து உள்ளார். 

 

 poison in drinking water;public in panic!

 

 

அத்தண்ணீரை பயன்படுத்தி தனது 4  குழந்தைகளுக்கும், பக்கத்து வீட்டு உறவினர்களின் குழந்தைகளுக்கும் தேநீர் செய்து கொடுத்துள்ளார். அப்போது குழந்தைகள் தேநீரில் ஒரு விதமான வாசனை வருகிறது என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளார். பின்னர் பள்ளிக்கு சென்ற  ரமேஷ் மற்றும் அவரது குழந்தைகள், உறவினர்கள் குழந்தைகள் 7 பேர்  பள்ளியில் மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.

 

 poison in drinking water;public in panic!

 

இதனைக்கண்ட  ஆசிரியர்கள்  காவல்துறைக்கும், அவசர ஊர்திக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தைகளை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் அக்குழந்தைகளின் தாயாரும் மயங்கிய நிலையில் இருந்ததால் அவரும்  மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் ரமேஷ் குடும்பத்தினர்கள் பயன்படுத்தும் குடிநீர் குழாயில் மட்டும், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குருணை மருந்தை மர்ம நபர்கள் வைத்திருப்பது தெரியவந்தது. 

 

 poison in drinking water;public in panic!

 

இதுகுறித்து  கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் இச்சதி செயலில் ஈடுப்பட்டவர்கள் யார் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதர ஆய்வாளர்கள் பள்ளிக்கு சென்று மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் ஊராட்சி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் வரை, பொதுமக்கள் அனைவரும் தண்ணீர் பிடிக்க கூடாது என்று தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பரப்பரப்பு நிலவுகிறது. இப்பரப்பரப்பால் பீதியடைந்த அப்பகுதி பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனை செய்ததால் பீதி பரவியது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.