Skip to main content

ஓ.பி.எஸ்க்கு திருச்சிக்கு சென்று ஆதரவு தெரிவித்த புதுக்கோட்டை அ.தி.மு.க மாஜிக்கள்...  உச்சகட்ட பரபரப்பில் அ.தி.மு.க!!

Published on 05/10/2020 | Edited on 05/10/2020

 

ops pudukottai admk

 

2021- ல் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணிக்கு முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்ற போட்டி, முட்டல் மோதல்களுடன் தொடங்கி ஆதரவாளர்களை ஒன்று சேர்க்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இடையே தொடங்கிய போட்டி, தற்போது மூன்றாவதாக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் வரை நீண்டுள்ளது. வைத்தியலிங்கம், தனது ஆதரவாளர்கள் மூலம் தானும் போட்டியில் இருப்பதை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இப்படி ஒரு நிலை வரும் என்பதை முன்பே உணர்ந்த முதல்வர் எடப்பாடி மாவட்டம் தோறும் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் தனக்கான ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவைப் பெற்றுத் திரும்பியுள்ளார். ஆனால், இன்னும் பல மாவட்டங்களுக்கு போகமுடியாதபடி கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி எடப்பாடிக்கு முட்டுக்கட்டை போட்ட ஓ.பி.எஸ்., வெளியில் சென்று தனக்கான ஆதரவைத் திரட்டி வருகிறார்.

7 ந் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும் கட்டாயத்தில் இருவரும் உள்ளனர். இந்த நிலையில் தான், மாஜி அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் எடப்பாடியுடன் நான் என்று ஒரு படத்தையும் பதிவையும் போட்டு சூசகமாக எடப்பாடிக்கு ஆதரவு என்பதைக் காட்டியுள்ளார்.

 

ops pudukottai admk


இந்த நிலையில் புதுக்கோட்டையில் ஜெ.மறைவுக்கு பிறகு மாவட்ட அமைச்சர் விஜயபாஸ்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சர் இருக்கும் அணிக்கு எதிர் அணியில் பயணிக்கத் தொடங்கி ஓ.பி.எஸ் அணிக்கு மாஜிக்கள் கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர், வழக்கறிஞர் நெவளிநாதன் ஆகியோர் தனி அணி உருவாக்கி செயல்படத் தொடங்கினார்கள். இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்பிற்கு பிறகும் கூட தனித்தே செயல்பட்டனர். அதனால் இவர்களுக்கு வழங்கப்பட்ட கட்சிப் பதவிகள் கூட ஒரே நாளில் பறிக்கப்பட்டது. ( தனக்காக தொடர்ந்து பயணிப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படுவது குறித்தோ, அவர்களுக்கு கட்சிப் பதவி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றோ ஓ.பி.எஸ் நினைக்கவில்லை என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் இன்று வரை ஆதங்கமாக உள்ளது) கட்சிப் பதவிகள் இல்லை என்றாலும் கட்சியில் தொடர்ந்து பயணித்தவர்களுக்கு பா.ஜ.க வலை விரித்தும் சிக்கவில்லை.

இந்த நிலையில் தான் மீண்டும் ஓ.பி.எஸக்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக இன்று மதுரையில் இருந்து சென்னை செல்ல திருச்சி வந்த ஓ.பி.எஸ்-ஐ கார்த்திக் தொண்டைமான், ராஜசேகர் உள்ளிட்ட பலர் சென்று சந்தித்து ஆதரவை தெரிவித்துள்ளனர். ஆனால் இதில் வழக்கமான மூவர் அணியில் இருக்கும் வழக்கறிஞர் நெவளிநாதன் இல்லை. காரணம் சில நாட்களுக்கு முன்பு கு.ப.கிருஷ்ணன் பதிவிட்ட இ.பி.எஸ் உடன் நான் என்ற படத்தில் வழக்கறிஞர் நெவளிநாதனும் இருந்தார். அதனால் அவரை அழைக்காமல் சென்று இருக்கலாம் என்றும் ர.ரக்களே கூறுகின்றனர்.

 

ops pudukottai admk


பரபரப்பான சூழ்நிலையில் புதுக்கோட்டை மாஜிக்கள் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், எடப்பாடி தரப்போ இவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களிக்கவா போகிறார்கள் என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு நாள் மட்டும் இருக்கும் நிலையில் இன்னும் பலர் இருவருக்கும் ஆதரவு கரம் நீட்டலாம். ஆனால், முதல்வர் வேட்பாளர் பெயர் 7 ந் தேதி அறிவிப்பு என்பது சந்தேகம் தான். மறுபடியும் வாய்தா வாங்கவும் வாய்ப்புகள் உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.