Skip to main content

பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய கூட்டணி - முத்தரசன் பேட்டி

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
R. Mutharasan


 

 

    
பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய கூட்டணி அமைப்போம் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
 

நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
 

தி.மு.க. தலைவர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்களும் கலந்து கொள்வது அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்துகிறது. ஒரே நிகழ்வில் கலந்து கொள்வதால் கூட்டணி ஏற்படுவது என்பது வாய்ப்பில்லாத ஒன்று. தி.மு.க. உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் தொடர்ந்து வகுப்பு வாதத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தும். பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் பா.ஜ.க.வை தோற்கடிக்க புதிய கூட்டணி அமைப்போம். 
 

 

 

தமிழகத்தில் பொதுப்பணித்துறை செயல் இழந்த துறையாக மாறிவிட்டது. அதிகளவில் ஆற்றில் நீர் திறந்தவிடப் பட்டும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 6 வருடங்களாக நிலவிய வறட்சி இந்த ஆண்டும் ஏற்பட கூடிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். 
இவ்வாறு கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்