Skip to main content

கவர்ச்சி ஆடை... பெண்களின் குத்து டான்ஸ்....அமைச்சரின் அசர வைக்கும் குத்தாட்டம்!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் 19-ந்தேதி மாலையுடன் நிறைவு பெறுவதால், 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. வாக்காளர்களின் 'பல்ஸ்'பார்த்து, பிரச்சாரம் மேற்கொண்டு சித்து வேலைகளை ஆளுங்கட்சி இப்போது ஆரம்பித்துவிட்டன. 
 

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். விக்கிரவாண்டியில் பாமக சப்போர்ட் இருப்பதால் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என நம்பும் அதிமுக, நாங்குநேரியில் கோட்டை விட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறது.

nanguneri assembly by election minister karuppanan dance


அக்டோபர் 14-ந்தேதி எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளும்போதும், 15-ந்தேதி ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யும்போது, கூட்டத்தை சேர்ப்பதற்காக ஆங்காங்கே குத்தாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர் அதிமுகவினர். 
 

குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார வேனில் நின்று பேசும்போது அதிக கூட்டத்தை காட்ட வேண்டும் என்பதற்காக அவர் பேசும் இடங்களிலும் எல்லாம் கவர்ச்சி ஆடை அணிந்த பெண் கலைஞர்கள் 'குத்தாட்டம்' ஆடினர். ஆண்களை இந்த குத்தாட்டம் வெகுவாக கவர்ந்தாலும், பெண் வாக்காளர்களை முகம் சுழிக்க வைத்தது. 
 

சில இடங்களில் பிரச்சார வேனையே மேடையாக்கி அதில் எம்.ஜி.ஆர். வேடமிட்ட கலைஞர்கள் 'புதிய வானம், புதிய பூமி....' என்ற பாடலுக்கு நடனமாடினர். எனினும் கவர்ச்சி ஆடை பெண்களின் "சிறுக்கி சிறுக்கி மக சீனா தானா டோய்..." பாடலுக்கு ஆடிய ஆட்டத்திற்கு சேர்ந்த கூட்டம், எம்ஜிஆரின் புதிய வானத்திற்கு கிடைக்கவில்லை.

nanguneri assembly by election minister karuppanan dance

"கிராமத்தில் திருவிழா நடத்தும்போது பாட்டுக் கச்சேரி நடத்துவதற்கும், விளையாட்டு போட்டி நடத்துவதற்கும் பர்மிஷன் வாங்க நம்மளை டிஎஸ்பி ஆபிசுக்கும், ஸ்டேசனுக்கும் நடையாய் நடக்க வைக்கிறாங்கப்பா. அதிலும் சாதிப்பாட்டு பாடக்கூடாது, ஆபாச நடனம் கூடாதுன்னு கண்டிசன் விதிக்கிறாங்க. ஆனா இப்ப இங்க நடத்துற குத்தாட்டம் போலீஸ் பாதுகாப்பு கொடுக்குது... இந்த சட்ட திட்டம் எல்லாம் சர்க்காருக்கு பொருந்தாது போல..." என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து உதறிவிட்டபடி நடையை கட்டினார் பெரியவர் ஒருவர்.


நாங்குநேரியில் கவர்ச்சி ஆடை அணிந்த பெண்களின் ஆட்டம் என்றால், விக்கிரவாண்டியில் குத்தாட்டம், அதுவும் அமைச்சரின் குத்தாட்டம். மக்கள் சோப்பு போட்டு குளித்த நீர் நொய்யல் ஆற்றில் கலந்ததால், நுரை ஏற்பட்டது என்று புதிய விளக்கம் அளித்த சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் வாக்கு சேகரிக்கும்போது, பேண்டு வாத்தியத்திற்கு ஈடாக குத்தாட்டம் ஆடி அங்கிருந்த ஆடியன்ஸை அசர வைத்தார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.