Skip to main content

மாற்றுக் கட்சியிலிருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

More than 6,000 people from the alternative party have joined the BJP!


முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, சமீபத்தில் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அப்போதைய தேசிய பொதுச் செயலாளராக இருந்த முரளிதரராவ் தலைமையில் பா.ஜ.கவில் இணைந்தார். அதன்பிறகு, அவருக்கு தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து அண்ணாமலையை, தமிழக பா.ஜ.கவினர் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைத்து, தமிழகத்தில் பாஜகவை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த வகையில், நேற்று அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டத்திற்கும் தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார்.

 

இந்நிகழ்ச்சியில், அரியலூர் மாவட்டம் செந்துறை, உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதியைச் சார்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்தும் புதிதாகவும் மாநிலத் துணைத் தலைவர்கள் கருப்பு முருகானந்தம், அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்