Skip to main content

சுற்றித்திரியும் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள்; வனத்துறை எச்சரிக்கை!!

Published on 20/11/2018 | Edited on 20/11/2018
elephant

 

ஓசூர் அருகே உள்ள வனப்பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிவதால் ஓசூர் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ஓசூர் வனப்பகுதியில் 40-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தஞ்சம் அடைந்துள்ளதால் சானமாவு, பீர்ஜேபள்ளி ,போடூர், ஆழியாலம், பாத்தகோட்டா போன்ற வனப்பகுதியிலுள்ள கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வனத்துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.   

 

 

சார்ந்த செய்திகள்