Skip to main content

'முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைப்பது போல் பேசுகிறார் மு.க.ஸ்டாலின்'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
nn

சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் அதிமுக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. அதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு  சிதம்பரம் நாடாளுமன்ற அதிமுக சத்திரகாசனை ஆதரித்து பேசினர். அப்போது அவர் பேசுகையில், ''வெற்றி கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு இரட்டை இலையில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். திமுக என்பது கட்சி அல்ல அது கம்பெனி அதற்கு முதலாளிகள் ஸ்டாலினும், உதய நிதிஸ்டாலினும்  தான். மக்களுக்காக, தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி  அதிமுக.  அதிமுக தமிழகத்திலே வலிமையான கட்சி  2 கோடி தொண்டர்கள் உள்ளனர். உழைப்பாளர்கள் நிறைந்த  அதிமுக  இல்லையென்றால் சர்வாதிகார நாடாக திமுக மாற்றிவிடும்.  அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக தான்.  

ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் அதிமுகவையும் என்னை பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை பொதுச் செயலாளர் பதவியை நீங்கள் கொடுத்துள்ளீர்கள் அதை பெரிதாக நான் கருதவில்லை உங்களில் ஒருவனாக இருப்பதையே பெருமையாக கருதுகிறேன். தமிழகத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி அமைந்துள்ளது. இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு கட்சிகள் உள்ளது சாதாரண தொண்டன் சந்திரகாசன் போல் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்குவார்களா? தலைமைக்கு கட்சிக்கு விசுவாசமாக இருந்ததால், இந்த வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளார்கள். இது அதிமுகவில் மட்டும் தான் முடியும் வேற எந்த கட்சியால் முடியாது. சாதாரண கிளை செயலாளராக உள்ள தொண்டன் முதல்வராக வர முடியும் என்றால் அது அதிமுகவில் தான் முடியும்.

சேலத்தில் ஸ்டாலின் அதிமுக 10 ஆண்டுகால ஆட்சி இருண்ட ஆட்சி என பேசி வருகிறார். இது முழு பூசணிகாயையும் சோற்றில் மறைப்பது போல் பேசி உள்ளார். அத்தனையும் பொய் நீங்கள் நடத்துவது தான் மக்கள் விரோத ஆட்சி.  பத்தாண்டு கால ஆட்சி பொற்கால ஆட்சி, நீங்கள் மக்களை சந்திப்பது இல்லை, மக்கள் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் ஒரு பொம்மை முதல்வராக உள்ளீர்கள். திமுக ஜெயிக்கப்போவது இல்லை. இத்தோடு திமுகவின் சரித்திரம் முடிய போகிறது. உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்த பார்க்கிறார்கள் இது என்ன மன்னர் பரம்பரையா, இது ஜனநாயக நாடு, உங்கள் கட்சியில் எல்லாரையும் அடிமையாக வைத்துள்ளீர்கள்.

அடுத்த திமுக தலைவர் யார் என்று கூறினால் அவர்களை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள். ஆனால் அப்படியில்லை அதிமுக ஜனநாயக கட்சி யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரலாம்.  சரிசமமாக நடத்தப்படுகிறது.   திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது,  விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்க முடியாமல் இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கோ பேக் மோடி என கோஷம் போட்ட நீங்கள் ஆளுங்கட்சியின் போது  கம்பளம் விரித்து வரவேற்கிறீர்கள்.  அதிமுக ஆட்சியில் டெல்டா பகுதி பாதுகாக்க வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வடலூர் பெருவெளியில் 100 ஏக்கரில் விடியா அரசு சர்வதேச மையம் அமைப்பதற்கு கண்டம் தெரிவிக்கிறேன். இதற்கு மக்கள் இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.

சார்ந்த செய்திகள்