Skip to main content

தினகரன் எப்போது சிறைக்குப் போவார் என காத்திருக்கிறார் செந்தில்பாலாஜி: தங்கமணி

Published on 23/04/2018 | Edited on 23/04/2018


 

minister thangamani


நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரான பி.தங்கமணி கலந்துகொண்டு பேசினார்.
 

அப்போது அவர் பேசுகையில், 
 

செந்தில்பாலாஜி ஏன்? அங்கு அவ்வளவு வேகமாக இருக்கிறார் என்று சொன்னால், எப்படியிருந்தாலும் டி.டி.வி தினகரன் உள்ளே போய்விடுவார், தான் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில்தான் இருக்கிறார். செந்தில்பாலாஜி இப்பொதுகூட மத்திய அரசில் சிலரை தொடர்பு கொண்டு என்னை முதல்வர் ஆக்குங்கள் என்று சொன்னாரா இல்லையா? அதோபோல் சென்னையில் இருக்கிற ஒரு மத்திய அரசை சார்ந்த ஒருவருடன் தொடர்பு கொண்டு என்னை முதலமைச்சர் ஆக்குங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னாரா இல்லையா? எப்பொழுது தினகரன் உள்ளே போவார் நான் முதலமைச்சர் ஆவோம் என்று பார்த்துக் கொண்டிருப்பவர் தான் இந்த செந்தில்பாலாஜி இதை நான் ஆதாரத்தோடு சொல்கின்றேன்.
 

இந்த செய்தியை வெளியிடுங்கள். இதற்கு அவர் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். அங்கே டி.டி.வி தினகரனை எதிர்த்து யாரும் எவரும் பேசமுடியாததற்கு ஒரே ஒரு உதாரணம்.
 

இப்பொழுது சமீப காலமாக தங்கதமிழ்ச்செல்வனின் பேட்டி வெளிவரவில்லை. ஏன் என்று சொன்னால் தங்கதமிழ்ச்செல்வனை அழைத்து நீங்கள் பேட்டி கொடுப்பதை அதிக அளவில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்புகிறார்கள். ஊழியர் கூட்டத்தில் நீங்கள் பேசும்போது அதிகமாக கை தட்டுகிறார்கள். இனி நீங்கள் பேட்டி அளிக்கக்கூடாது. அதிகமாக பேசக்கூடாது என்று அவருக்கு தடை விதித்துள்ளார்கள் என்று சொன்னால், அம்மா அவர்களால் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தங்கதமிழ்செல்வன். அவரை பேசக்கூடாது என்று சொன்னால், அந்த இயக்கம் எப்படிப்பட்ட இயக்கமாக இருக்கும். தான்தோன்றித் தனமாக எப்பயாவது பதவிக்கு வரவேண்டும் என்ற வெறியில் தினகரன் எதையாவது கூறிக் கொண்டு இருக்கிறார்.
 

ஆஞ்சநேயர் கோயிலில் என்னை சத்தியம் செய்ய சொன்னவர் செந்தில்பாலாஜி. இவர் முதலமைச்சர் ஆவதற்கு யாரிடம் பேசினார் என்பதை சொல்ல தயாராக உள்ளேன். அவர் கூறுவது உண்மை இல்லை என்றால், இதே ஆஞ்சநேயர் கோயிலில் நான் கூறியது தவறு என்று செந்தில்பாலாஜி சத்தியம் செய்து கூறட்டும். இவ்வாறு பேசினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.