Skip to main content

"தற்போது பள்ளிகள் திறப்பு இல்லை"- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!

Published on 05/09/2020 | Edited on 05/09/2020

 

MINISTER SENGOTTAIYAN PRESS MEET ERODE DISTRICT


ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை. அனைத்து ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துகள். தனியார் பள்ளிகளில் 40%க்கும் மேல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்க தனியாக இணையத்தள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என ஆசிரியர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்