Skip to main content

"சென்னையைப் போல் முதல்வர் திருச்சியையும் கவனிக்கிறார்" - அமைச்சர் நேரு 

Published on 06/01/2023 | Edited on 06/01/2023

 

minister k  n  nehru talks about cm stalin at trichy 

 

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அமைந்துள்ள பகுதியில் மாநகராட்சி சார்பில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பெரிய மிளகு பாறை பகுதியில் அமைந்துள்ள அரசு இயன்முறை மருத்துவமனை வளாகத்தில் மாநகராட்சியின் சார்பில் 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காகத் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.

 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் நேரு, "நீண்ட காலமாக இந்தப் பணியை செய்ய வேண்டும் என்று கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கு தொகுதி மக்களுக்கு செய்ய முடியவில்லை. தற்போது முதல்வர் திருச்சிக்கு எது வேண்டும் என்று கேட்டாலும் செய்வதால், இந்தப் பணி சாத்தியமானது. 2006-2011, 1996-2001 காலகட்டத்தில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது அரியமங்கலம் பகுதியில் ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறக்க அனுமதி கேட்டோம். அதேபோல் திருவெறும்பூர் பாலத்திற்கு அருகில் அன்றைய தலைவர் சோமு கேள்வி கேட்டபோது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அனுமதி அளித்தார். திருச்சி மாவட்டத்தில் பொன்மலையில் தொடங்கப்பட்ட திட்டம், காங்கிரஸ் காலத்தில் ஆரம்பித்த திட்டமாக இருந்தாலும், 90எம்எல்டி லிட்டர் அளவு மட்டுமே தண்ணீர் பெற்று வந்தோம். ஆனால் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது காவிரியில் தண்ணீர் வேண்டாம், கொள்ளிடம் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று கேட்டோம். ஏன் கொள்ளிடத்தில் வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். கொள்ளிடம் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருக்கும் என்று கூறி 220 கோடி மதிப்பீட்டில் 120எம்எல்டி பெறப்பட்டது. ஆனால் இந்த திட்டம் முடியும்போது 280 கோடி ரூபாய் செலவானது. இன்று திருச்சி மிளகு பாறையில் லாரியில் தண்ணீர் பிடித்து வந்தனர். எனவே இந்த முறை 95 லட்சம் மதிப்பில் பெரிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் இருந்தபோது 33 நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டு 100 எம்எல்டி கொண்டு வந்தோம்.

 

minister k  n  nehru talks about cm stalin at trichy 

உறையூர் பகுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாத நிலையில் கடந்த ஆட்சியில் அப்பகுதிக்கு கொண்டு வந்த திட்டங்கள் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. தற்போது கம்பரசம்பேட்டை பகுதியில் திறக்கப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் 11 நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நேரடியாக உறையூர், தில்லைநகர், மருத்துவமனை வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இரும்பு சத்து இல்லாத நல்ல சுத்தமான தண்ணீர் வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தருவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுகிறது. தேசிய கல்லூரி பகுதியில் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 400 மீட்டர் தூரம் இணைக்க வேண்டி உள்ளது. அந்தப் பணிகள் முடிந்தால் எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் கிடைக்கும். உறையூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பைப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய பைப்புகள் போடப்பட்டுள்ளது. மக்களுக்குச் சரியான நேரத்தில் நீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

புதை வடிகால் திட்டங்கள் அனைத்தும் விஸ்தரிப்பு பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சாலைகள் 470 கிலோமீட்டர் தூரத்திற்கான 50 சதவீத பணிகள் முடிவடைவதற்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள சாலைகளும் விரைவில் முடியும். இதற்கு  இடைப்பட்ட காலம்  மழை காலம் என்பதால் தாமதமாகிவிட்டது.புதிய கழிவறைகள், புதிய ரேஷன் கடைகளை கட்டி வருகிறோம்.  தமிழக முதல்வர் கூறியது போன்று, 380 கோடியில் புதிய பேருந்துகள்,  450 கோடியில் மார்க்கெட்கள் மற்றும் வணிக வளாகங்கள் வரப் போகிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது போல தமிழ்நாடு முழுவதும் 33 இடங்களில் பேருந்து நிலையங்கள், 35 இடங்களில் மார்க்கெட், அறிவித்து அரசாணை வெளியிட்டு பணிகள்  நடைபெற்று வருகிறது. மதுரை, சேலம், கோவை பாதாள சாக்கடை திட்டம் என்று பணிகள் தொடங்கி பாதியில் நிறுத்தப்பட்டதோ அனைத்து இடங்களுக்கும் நிதி ஒதுக்கி பணிகள் துவங்க உள்ளது.

 

minister k  n  nehru talks about cm stalin at trichy 

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மேலாண் இயக்குநராக இருந்தவர். எனவே அவர் இந்த துறைக்கு என்று 34 ஆயிரம்  கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து பேசினார். அதில் மாநில அரசு 8500 கோடி, மத்திய அரசு 8000 ஆயிரம் கோடி, ஜப்பான் வங்கியில் இருந்து 16000 கோடி நிதி பெற முதல்வர் அனுமதி வழங்கி இருக்கிறார். எல்லா இடங்களுக்கும் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கொண்டு செல்வதும், பழைய குடிநீர் திட்டங்களைப் புதுப்பிப்பதும்,  மணப்பாறையில் குடிநீர் சரியாக வருவதில்லை என்ற நிலை இருந்தது. வாரத்திற்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த தண்ணீர் தற்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் கோவையில் சாலைகளை செப்பனிட வேண்டும் என்று கோவை மாநகராட்சிக்கு 200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக 240 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து காவிரி, கொள்ளிடம் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் சொல்லும் வேலையை செய்தாலே சிறந்த நகரமாக மாறிவிடும். பஞ்சப்பூரில் புதிதாக 270 கோடி ரூபாய் செலவில் 100 எம்எல்டி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு திடல் அதே பகுதியில் தான் அமைய உள்ளது. மாநகராட்சிக்குச் சொந்தமான 540 ஏக்கர் நிலம் வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும். அவர் சென்னையை கவனிப்பது போல திருச்சியையும் கவனிக்கிறார்" என்று பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.