Skip to main content

டி.ஆர் பாலுவை கண்கலங்க வைத்த அமைச்சர் துரைமுருகனின் பேச்சு 

Published on 08/01/2023 | Edited on 08/01/2023

 

nn

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர். பாலு எழுதிய 'பாதை மாறப் பயணம்' எனும் புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட்டார். அதன் பிறகு மேடையில் ஒவ்வொருவராக பேச ஆரம்பித்தனர். அப்பொழுது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கலைஞர் குறித்துப் பேசிய பொழுது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கண்கலங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்