Skip to main content

13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Minister Anbil Mahesh who gave the  award to 13 teachers

 

இந்தியா முழுவதும் நேற்று (05.09.2021) முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினார்கள். ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை நல்ல ஆசிரியர்களுக்கு வழங்கி கௌரவிக்கபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான விருதை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. அதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வுசெய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்குப்  பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு தலைமை வகித்தார்.

 

திருச்சி மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் விவரம்; மணச்சநல்லூர் கவுண்டம்பட்டி ஊராட்சி தலைமை ஆசிரியர் கீதா, துறையூர் தொப்பம்பட்டி ஊராட்சி தலைமை ஆசிரியர் அசோக்குமார், எடமலைப்பட்டி புதூர் ஊராட்சி இடைநிலை ஆசிரியர் ஜெயராணி, வையம்பட்டி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி, வெல்லனூர் ஊராட்சி பட்டதாரி ஆசிரியர் பாலசுப்ரமணியன், மண்ணச்சநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் முத்துச்செல்வன், மண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் அன்பு சேகரன், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சிவராஜ், மணப்பாறை உசிலம்பட்டி தியாக சிலர் ஆலய மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார், திருநெடுங்குளம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நித்யானந்தம், திருவரம்பூர் மேலகல்கண்டார்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பீபி அப்துல், கைலாசபுரம் பாய்லர் பிளாண்ட் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கணேசன், திருவரம்பூர் வெங்கூர் செல்லம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பகவதியப்பன் ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ அறிமுக கூட்டம்!

Published on 21/03/2024 | Edited on 22/03/2024
MDMK candidate Durai Vaiko's introductory meeting

திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சி தெற்கு  மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் ம.தி.மு.க வேட்பாளர் துரை.வைகோ தன்னை அறிமுகம் செய்துகொண்டு ஆதரவு கோரி உரையாற்றினார்.

இந்நிகழ்வில் திருச்சி மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாவட்டக் கழகச் துணை செயலாளர் செங்குட்டுவன், ம.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், கு.சின்னப்பா, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் மு. இராஜேந்திரன், ரொஹையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.