Skip to main content

வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை !!

Published on 28/09/2019 | Edited on 28/09/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷா,  நகராட்சி பொறியாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிதம்பரம் நகராட்சி பகுதிகளில் கன மழையால் வெள்ளம் பாதிக்கும் இடங்களை கண்டறிந்து அப்பகுதிகளில் முன்னெச்சரிக்கை பணிகள் உடனுக்குடன் செய்ய அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

meeting held


மேலும் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி பகுதியில் போர்காலஅடிப்படையில் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரால் மண்டல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட வருவாய் அதிகாரி செல்வராஜ் தலைமையில் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சிதம்பரம் நகரில் உள்ள 33 வார்டுகளிலும் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுக்களுடன் தமிழ்நாடு குடிநீர் வாரிய பொறியாளர்கள் ஒருங்கிணைந்து பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


கூட்டத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அசோக் பிரசன்னா உதவி பொறியாளர்கள் கார்த்தி, கவிதா. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மருத்துவர் மஞ்சு, கால்நடை உதவி மருத்துவர் அபிராமி,  காவல்துறை ஆய்வாளர் கிருஷ்ணவேணி உதவி ஆய்வாளர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து பேசினார்கள்.

இதனைத்தொடர்ந்து முதல்கட்ட பணியாக சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட சோழன் பணிமனை அருகே வடிகால் வாய்க்காலில் அடைத்துள்ள ஆகாயதாமரை செடியை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் உள்ளிட்ட நகராட்சி ஆணையர், பொறியாளர் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி துவக்கம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Summer free sports training for students begins in Chidambaram

கோடைக்காலத்தில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக இலவச விளையாட்டு பயிற்சிகள் துவக்கப்பட்டது.

சிதம்பரம் அரசு உதவி பெறும் ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளி சார்பாக சின்ன மார்க்கெட் பகுதியில் உள்ள பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவர்களை கோடைக்காலத்தில்  நல்வழிப்படுத்தும் விதமாக  இலவசமாக காலை மற்றும் மாலை வேலைகளில் யோகா, சிலம்பம், இறகு பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இதன் துவக்க நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை பள்ளி மைதானத்தில்  நடைபெற்றது.  இந்நிகழ்சிக்கு ஆறுமுக அரசு உதவி பெறும் பள்ளி குழு செயலாளர் அருள் மொழி செல்வன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக பள்ளி குழு தலைவர் சேது சுப்பிரமணியன் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு பயிற்சிகள் குறித்தும், அதனால் ஏற்படும் உடல் ரீதியான நன்மைகள் குறித்தும் பேசினார்கள்.

Summer free sports training for students begins in Chidambaram

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராம்குமார், உடற்கல்வி ஆசிரியர் எத்திராஜன், சிலம்பகளை ஆசிரியர் ராஜா ராம் யோகக்கலை ஆசிரியர் முத்துக்குமாரசாமி, கூடைப்பந்து நடராஜன், அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி பயிற்றுநர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சிகளை அளித்தனர். இதில் சிதம்பரம் நகரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி, பள்ளியின் தமிழாசிரியர் செல்வம் நன்றி கூறினார் இதில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.