Skip to main content

சுகாதாரத் திட்டங்களை தொடங்கிய மீனாட்சி உயர்கல்வி ஆராய்ச்சி அகாடமி

Published on 01/02/2025 | Edited on 01/02/2025
medical

சமூக மேம்பாட்டுக்காக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி  சுகாதாரத் திட்டங்களை தொடங்கியுள்ளது.

உயர் கல்வியில் முன்னோடியாக இருக்க பாடுபடும் பல்துறையின் நிகழ்நிலைப் பல்கலைக்கழகமான மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி கடந்த 20 ஆண்டுகளாக தரமான கல்வி மற்றும் சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் மகத்தான சேவைகளை வழங்கி வருகிறது. சமூகத்தின் ஒதுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய பிரிவுகளின் நலனுக்காக பல்வேறு சுகாதார திட்டங்களை தொடங்குவதன் மூலம் சமூக மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டை நேற்றைய தினம் இந்த நிறுவனம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இதன் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி வேந்தர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர், நிறுவனத்தின் துணை வேந்தர் சி.ஸ்ரீதர், சார்பு துணைவேந்தர் கிருத்திகா, பதிவாளர் சுரேகா வரலட்சுமி, டீன் கே.வி ராஜசேகர் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் பூபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Meenakshi Higher Education Research Academy which started health programs

கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வழங்கப்படும் அனைத்து மருந்துகளும், புதிதாக பிறந்த  குழந்தைகளுக்கு தடுப்பூசிகளும் இலவசமாக வழங்கப்படும். கதிரியக்க நோய் கண்டறிதல் திட்டம் 2025 மூலம் மலிவு விலையில் மேம்பட்ட ஆய்வுகளை வழங்குகிறது. இது மருத்துவ ரீதியாக ஏழை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலை விபத்து  நோயாளிகளுக்கு உதவுவதற்காக மீனாட்சி அவசரகால அதிர்ச்சி சிகிச்சை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காயம் உள்ள நோயாளிகள் இந்த திட்டத்தின் கீழ் முதலுதவி மற்றும் எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் போன்ற விசாரணைகள் உள்ளிட்டவற்றை இலவசமாக பெறலாம். காயங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைக்கான தியேட்டர் கட்டணம் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்