Skip to main content

மே 1; உலக சாதனை படைத்த கலைஞர்கள்! 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

May 1; World Record trichy

 

மே 1ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்கோவிலில் பரத கலைஞர்கள், கர்நாடக இசைக் கலைஞர்கள், புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் இசைக் கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இணைந்து போ சம்போ பாடலுக்கு இசை அமைத்து உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.


உலக சாதனை பட்டியலில் அங்கீகரிக்கப்பட்டு இந்த சாதனை இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், கலைமாமணி ரேவதி முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 NIA raids at 11 places in Tamil Nadu

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

உலக போதை ஒழிப்பு தினம்; மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
World Anti-Drug Day; Students awareness rally!

உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை ரெயில்வே எஸ்.பி தொடங்கி வைத்தார்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பள்ளி மாணவர்கள் ரயில் நிலைய நடை மேடைகள் மற்றும் வளாகத்தில் ஊர்வலமாக சென்றனர். இதில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமைத் தாங்கினார். இதில் துணை போலீஸ் கண்காணிப்பாளர் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் மோகனசுந்தரி, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன், சப் இன்ஸ்பெக்டர் திருமலை ராஜா, லட்சமி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன், பாலமுருகன் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பத்திரிகையாளர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் கூறுகையில் “போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி திருச்சி ரெயில் நிலையம் மட்டும் இன்றி திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட 24 மாவட்டங்களிலும் நடைபெற்றது. போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் 3 ரெயில்வே உட்கோட்டங்களிலும் தனிப்படை அமைக்கப்பட்டு போதைப் பொருட்கள் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.