Skip to main content

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கைது!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020
 Marxist Communist Party secretary including Balakrishnan arrested in Cuddalore

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகன்களான வியாபாரிகள் போலீசார் தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டதாகக்கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன், "தமிழகம் முழுவதும் மருத்துவர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறையினர் என அனைவரும் கரோனாவை எதிர்த்து கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்ற வேளையில், சாத்தான்குளம் காவல்துறை தந்தை, மகன் என ஜெயராஜ், பென்னிக்ஸ் 2 பேரையும் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கி, மரணம் அடையும் தருவாயில் அவர்களை கோவில்பட்டி சிறைச்சாலையில் அடைத்திருக்கிறார்கள். இது சாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அடித்து கொலை செய்த சம்பவம் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இரண்டு அப்பாவிகளை காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அடித்து இருக்கிறார்கள். அந்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆய்வாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியில் இருந்த காவலர்களை கைது செய்ய வேண்டும். இறந்தவர்களின் காயங்களை முறையாக பார்க்காத, பதிவு செய்யாத நீதிபதி, மருத்துவர்கள் உள்ளிட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கொடூரத்தை கண்டித்து இன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். தமிழக அரசு, முதலமைச்சர் இதை மூடி மறைப்பதை  கைவிட்டு குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ARREST

 

இதை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அந்த குடும்பத்திற்கு தமிழக அரசு கொடுத்திருக்கின்ற நிவாரணம் போதாது. அவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு  வழங்க வேண்டும்" என்றார். அவரிடம் 'கரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "கரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது ஒவ்வொரு நாளும் வெளிவருகின்ற இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது. ஆகவே இதில் தமிழக அரசு செயல்பாடு தோல்வி என்றுதான் நாங்கள் கருதுகிறோம்" என்றார்.

இதேபோல் இதனை கண்டித்து கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்திலும், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி போன்ற பகுதிகளிலும் மக்கள் அதிகாரம், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஐந்தைந்து பேர்களாக தனித்தனியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது உயிரிழந்த குடும்பத்திற்கு நீதி கேட்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரியும் கைகளில் பதாதைகளை ஏந்தி, கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.