Skip to main content

காதல் விவகாரம்; இளைஞரைக் கொன்ற சிறுவர்கள்!

Published on 23/01/2023 | Edited on 23/01/2023

 

Love issue one passed away 3 arrested in nellai

 

நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகேயுள்ள செல்வமருதூரைச் சேர்ந்த தங்கதுரையின் மகன் ராஜேந்திரன் (22). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த அக் 9ம் தேதியன்று குலசேகரபட்டினம் கோவிலுக்குச் சென்றுவருவதாக சொல்லிச் சென்றவர் பின் வீடு திரும்பவில்லையாம். உறவினர்கள் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லையாம்.

 

இதுகுறித்து அக். 21 அன்று அவரது தாய் சுமதி திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசாரின் விசாரணையிலிருக்கிறது. இந்தச் சூழலில் உவரி போலீசார் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக திசையன்விளையைச் சேர்ந்த ஒரு வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், மாயமான ராஜேந்திரனை தட்டார்மடம் பக்கமுள்ள எம்எல்தேரியில் கொன்று புதைத்ததாகத் தெரிவிக்க அதிர்ந்து போன போலீசார் மேலும் விசாரிக்க, இதில் திசையன்விளையைச் சேர்ந்த 3 சிறுவர்களுக்கும் தொடர்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். 

 

Love issue one passed away 3 arrested in nellai

 

போலீசார் மூன்று சிறுவர்களையும் பிடித்து விசாரணை நடத்தியதுடன் ராஜேந்திரனைப் புதைத்த எம்எல்தேரி பகுதிக்கு அழைத்துவர அவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். பின்னர் வள்ளியூர் டி.எஸ்.பி. யோகேஸ்குமார், திசையன்விளை இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ், சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா முன்னிலையில் ராஜேந்திரனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே அரசு டாக்டர் மூலம் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது.

 

8, 10, 12ஆம் வகுப்புகள் பயிலும் அந்த சிறுவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராஜேந்திரனும், 16 வயது சிறுவனும் ஒரே பெண்ணைக் காதலித்து வந்துள்ளனர். இந்தக் காதல் போட்டி தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட அந்த 16 வயது சிறுவன் தனது நண்பர்களான 15 வயதுடைய இருவருடன் சேர்ந்து ராஜேந்திரனை அக். 9 அன்று ஆள் நடமாட்டமில்லாத தட்டார்மடம் எம்எல்தேரிக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். ஏற்கனவே மது, கஞ்சாவுக்கு அடிமையான இந்த 4 பேரும் சேர்ந்து மது அருந்தியிருக்கிறார்களாம். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட சிறுவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ராஜேந்திரனை வெட்டிக் கொன்று உடலைப் புதைத்துள்ளது தெரியவந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் அவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

16 வயது சிறுவர்கள் நடத்திய கொலைபாதகம் ஏரியாவில் திகிலைக் கிளப்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஆவடி கொள்ளை சம்பவம்; வெளியான புதிய தகவல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
avadi jewelry incident New information released 

சென்னையை அடுத்துள்ள ஆவடி முத்தாபுதுப்பேட்டையில் பிரகாஷ் என்பவர் ‘கிருஷ்ணா ஜுவல்லரி’ என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நகைக்கடைக்கு நேற்று (15.04.2024) நண்பகல் 12 மணியளவில் 5 மர்ம நபர்கள் தமிழக பதிவெண் கொண்ட மாருதி ஸ்விஃப்ட் காரில் வந்துள்ளனர். இவர்களில் 4 பேர் கடையின் உரிமையாளரான பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தக் கடைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதியப்பட்ட காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் நகைக்கடை உரிமையாளரின் கை, கால்களை கட்டிப்போட்டு நகைக்கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஆவடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டிருந்தனர். இது குறித்து கூடுதல் கமிஷனர் ராஜேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ‘பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையர்களைப் பிடிக்க 8 தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றோம். மேலும், கொள்ளையர்கள் வந்த காரின் எண் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடும் பணியை மேலும் தீவிரப்படுத்தி வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார். 

avadi jewelry incident New information released 

இந்நிலையில் இந்த நகைக்கடையில் கைவரிசை காட்டியது வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொள்ளையர்களின் காரை பின் தொடர்ந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதே சமயம் கொள்ளையர்கள் காரை பயன்படுத்தாமல் ரயில் அல்லது விமானம் மூலம் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், கொள்ளையர்கள் இன்று (16.04.2024) மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் பதிவெண்ணை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.