Skip to main content

தமிழில் 'அன்பு' தான் மூலதனம்... - கனடா பேராசிரியை பெருமிதம்!

Published on 22/01/2020 | Edited on 22/01/2020

"தமிழும், தமிழர்களும் மனித குலம் உருவானதிலிருந்தே மூத்த குடிமக்களாக விளங்குகறார்கள். குறிப்பாக தமிழகத்தில் பண்பாடும், கலாச்சாரமும் உலகையே வியக்க வைக்கிறது" என தமிழ் சமூகத்தை பரந்த மனதுடன் பாராட்டுகிறார் கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு பல்கலை கழக பேராசிரியை,

ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொங்குநாடு பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைைம தாங்கினார்.


 

 'Love' is the capital of Tamil ... - Canada Professor proud

 

கருத்தரங்கில் கனடாவில் உள்ள டோராண்டோ பல்கலைக்கழக பேராசிரியை பிரேந்தா ஈ.எப்.பெக் என்பவர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தமிழின் பெருமிதத்தைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

“ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தை அறிந்து கொள்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். இதற்கு எனது பெற்றோர் மிகவும் உறுதுணையாக இருந்தனர். அவர்கள் ஒரு காரையே வீடுபோல மாற்றி எனக்கு தந்தனர். அதில் பலஇடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். அப்படித்தான் தமிழகத்திற்கும் வந்தேன். நான் எத்தனையோ நாடுகளுக்கு சுற்றியுள்ளேன் ஆனால் தமிழ்நாடு மனிதகுலத்திற்கே மூத்ததாக விளங்குவதை கண்டு வியந்து போனேன். 

ஒருமுறை கன்னியாகுமரிக்கு வந்தேன். அப்போது இந்திய நாட்டின் கலாசாரத்தையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் எனக்கு வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். இப்போது கொங்குநாட்டின் பாரம்பரியம், கலாசாரம், வீரம், வரலாற்று கதைகள் குறித்து ஆராய்ச்சி செய்தேன் எல்லாமே கடந்து விட்ட வரலாறுகளைப் பேசுகிறது. ஆனால் இது எக்காலத்திலும் அழியாது. 

 

 'Love' is the capital of Tamil ... - Canada Professor proud

 

வெளிநாட்டிலிருந்து வந்த நான் உங்கள் பெருமிதத்தை இங்கு உணர்கிறேன். நீங்கள் எல்லோரும் தமிழ் மொழியின் சிறப்பை உயர்த்திப் பிடிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் பல வகையான உபசரிப்புகள், வீரம், காதல் இருக்கிறது. இங்கு எல்லாவற்றிற்கும் அன்பே மூலதனமாக உள்ளது"என்றார்.

இதில் பேராசிரியைகள், மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். நம் மொழியின் பெருமையை இனத்தின் சிறப்பை வெளிநாட்டவர்கள் எடுத்து கூறுவது போல் சிறப்பு வேறு என்னவாக இருக்க முடியும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.