Skip to main content

ஊரக உள்ளாட்சித் தேர்தல்- வெற்றி நிலவரம் (04.45 PM)!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

local body election results 2020


திருவாடானை- கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி.

 
விருதுநகர்- எரிச்சநத்தம் ஊராட்சி மன்ற தலைவர்  தேர்தலில்  முத்துப்பாண்டி வெற்றி.
 

சாத்தான்குளம்- கோமானேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி.
 

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி.
 

கன்னியாகுமரி-மங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜன் வெற்றி. 
 

கும்பகோணம்- மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி.
 

மதுரை-சக்கரப்பநாயக்கனுர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜான்சிராணி வெற்றி.
 

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி.
 

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி.
 

தூத்துக்குடி- கரிசல்குளம் ஊராட்சியில் தலைவர் தேர்தலில் தங்கபாண்டியம்மாள் வெற்றி.
 

திண்டுக்கல்-நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா வெற்றி. 
 

கும்பகோணம்- திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி. 
 

திண்டுக்கல்-புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி.
 

ஈரோடு-புங்கார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி.
 

கன்னியாகுமரி-மருதூர்க்குறிச்சி ஊராட்சிதலைவர் தேர்தலில் செல்வராணி வெற்றி. 

 

விருதுநகர்- வத்திராயிருப்பு 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி.
 

திண்டுக்கல்-ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.
 

பட்டுக்கோட்டை- ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி.
 

 மதுக்கூர்- ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி.
 

தஞ்சாவூர்-பூதலூர் 2 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அமமுக சவிதா வெற்றி.   
 

ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேவதாஸ் வெற்றி. 
 

திருப்பனந்தாள் ஒன்றிய கவுன்சிலர் 5 வது வார்டில் திமுக வேட்பாளர் சம்பத் வெற்றி.  


திருவள்ளூர்-பூண்டி ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டில் திமுக வேட்பாளர் பேபி வெற்றி.
 

ஈரோடு-அம்மாபேட்டை ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில்அதிமுக வேட்பாளர்  ஷோபா வெற்றி.
 

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்புசாமி  வெற்றி.
 

மதுரை- உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி.  
 

கொடைக்கானல் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி.  
 

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 8 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுடலை வெற்றி. 
 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி.
 

 ஈரோடு-பவானிசாகர் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் ருக்மணி வெற்றி.
 

சேலம்-கொங்கணாபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனிவேலு வெற்றி.
 

சேலம்-சங்ககிரி ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் பாமக வேட்பாளர் குமார் வெற்றி.  
 

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி. 
 

நீலகிரி: சேரங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் லில்லி வெற்றி. 
 

சிவகங்கை: காளையார்கோவிலில் 3- வது வார்டில் திமுக வேட்பாளர் செல்வி, 4- வது வார்டில் அதிமுக வேட்பாளர் மீனாட்சி, 5- வது வார்டில் அதிமுக வேட்பாளர் கோகிலா வெற்றி. 
 

திருச்சி: தா.பேட்டை ஒன்றியம் 3- வது வார்டில் திமுக வேட்பாளர் சரவணன் வெற்றி.
 

தேனி: ஆண்டிப்பட்டி ஒன்றியம் 5- வது வார்டில் அதிமுக வேட்பாளர் கண்ணன் வெற்றி.
 

நாமக்கல்: திருச்செங்கோடு ஒன்றியம் 2- வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி. 
 

திருப்பூர்; அவிநாசி ஒன்றியம், ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் பழனிச்சாமி வெற்றி. 
 

திருவண்ணாமலை: தெள்ளாறு ஒன்றியம் 3- வது வார்டில் அதிமுக வேட்பாளர் பாஞ்சாலை வெற்றி. 
 

புதுக்கோட்டை- ஆவுடையார்கோவில் ஒன்றியம் 1- வது வார்டில் திமுக வேட்பாளர் அஞ்சலிதேவி வெற்றி.
 

தேனி பெரியகுளத்தில் 2- வது வார்டில் திமுகவின் சண்முகவள்ளி, 3- வது வார்டில் திமுகவின் செல்வி வெற்றி. 
 

விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒன்றியம் 6- வது வார்டில் திமுக வேட்பாளர் வீரமதி வெற்றி. 
 

திருவள்ளூர்: திருத்தணி ஒன்றியம் 3- வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் தங்கதனம் வெற்றி. 
 

திருவண்ணாமலை: செங்கம் ஒன்றியம் 2- வது வார்டில் திமுக வேட்பாளர் சரஸ்வதி அண்ணாமலை வெற்றி. 
 

மதுரை: மேலூர் ஒன்றியம் 10- வது வார்டில் திமுக வேட்பாளர் தமிழ்மாறன் வெற்றி. மேலூர் அருகே அரிட்டாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 79 வயது மூதாட்டி வீரம்மாள் வெற்றி. 


கிருஷ்ணகிரி; கே.என். தொட்டியில் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்ட 21- வயது கல்லூரி மாணவி ஜெய்சந்தியா ராணி வெற்றி. 


மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவி (292/515)

திமுக கூட்டணி: 147 முன்னிலை 
அதிமுக கூட்டணி: 143 முன்னிலை 
அமமுக: 2 முன்னிலை 


ஒன்றிய கவுன்சிலர் பதவி (1220/5067)

திமுக கூட்டணி; 589 முன்னிலை 
அதிமுக கூட்டணி: 562 முன்னிலை 
அமமுக: 14 முன்னிலை 
பிற கட்சிகள்- 55 முன்னிலை 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குரூப் - 2 முடிவு வெளியீடு; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
TNPSC Notification on Group – 2 result output

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது.

இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் 2 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. கடந்த 2 ஆம் தேதி (02-02-24) வெளியிட்டது.

இதனையடுத்து, சென்னை பிராட்வேயில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் குரூப்-2 பணிகளுக்கான முதல்கட்ட நேர்முகத் தேர்வு கடந்த 12 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி (இன்று) வரை நடைபெற்றது. அதன்படி டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள 327 பேருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. 

இந்த நிலையில், குரூப்-2 பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், அதன் முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. அதில், 161 பணியிடங்களுக்கான மதிப்பெண்ணை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 

Next Story

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
TNPSC Group-2 Main Exam Results Released!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்த முதல்நிலைத் தேர்வில் 57,641 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடந்தது. இதையடுத்து, இந்தத் தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியிடப்படாமலேயே இருந்தது.

இதனையடுத்து, தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து, குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் ஜனவரி 12, 2024 அன்று வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.பி. கட்டுப்பாட்டு அலுவலர் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 நேர்காணல் பதவிக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் ஒரு நாள் முன்னதாகவே வெளியிடப்பட்டுள்ளன. எனவே தேர்வர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணலுக்குத் தேர்வானவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்னதாக டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மற்றும் 2ஏ  தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதாவது ஏற்கனவே இருந்த காலிப்பணியிடங்களுடன் புதிதாக 620 காலிப் பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் குரூப்-2 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 5,240லிருந்து 5,860 ஆக அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது 6151 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.