Skip to main content

கொலை வழக்கில் கைதான மூவருக்கு ஒரே நாளில் குண்டாஸ்!

Published on 28/11/2018 | Edited on 28/11/2018

சேலத்தில் ஆட்டோ கோபால் கொலை வழக்கில் கைதான மூன்று பேரையும் போலீசார் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


சேலம் பெரியபுதூர் சிஎஸ்பி நகரை சேர்ந்தவர் ஆட்டோ கோபால் என்கிற கோபாலகிருஷணன். அவர் கடந்த 14.6.2018ம் தேதியன்று தன்னுடைய வீட்டில் இருந்தார். அப்போது ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. 

 

murder case


இந்த சம்பவம் தொடர்பாக பெரிய புதூரை சேர்ந்த உலகநாதன் (24), பூபாலன் (24), முதல் அக்ரஹாரத்தை சேர்ந்த ராஜ்குமார் (23) மற்றும் இவர்களின் கூட்டாளிளான அரவிந்த்குமார், விஜய் என்கிற விஜயகுமார், பிரசாந்த் ஆகிய ஆறு போலீசார் கைது செய்தனர்.


முன்விரோதம் காரணமாக இந்த கொலையை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது. கொலை கும்பலிடம் இருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 


இந்த வழக்கில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த உலகநாதன், பூபாலன், ராஜ்குமார், விஜய் என்கிற விஜயகுமார் ஆகியோர் கடந்த   அக்டோபர் மாதம் பிணையில் வெளியே வந்தனர். 


இந்நிலையில் கடந்த 3.11.2018ம் தேதியன்று, அழகாபுரம் கண்ணகி தெருவை சேர்ந்த மருதாசலம் என்பவரிடம் பிருந்தாவன் சாலையில் கத்தி முனையில் 1450 ரூபாயை அவர்கள் மூவரும் வழிப்பறி செய்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவர்கள் நால்வரையும் அழகாபுரம் போலீசார் கைது செய்தனர்.


கைதானவர்களில் உலகநாதன், பூபாலன், ராஜ்குமார் ஆகியோர் கொலை, வழிப்பறி மட்டுமின்று மேலும் சில குற்ற வழக்குகளும் உள்ளன. இதையடுத்து, மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் மூன்று பேரும் இன்று குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அவர்களிடம் தடுப்புக்காவல் ஆணை சார்வு செய்யப்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

120 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்த எஸ்.பி.

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sp recovered 120 stolen cell phones and handed them over to their owners.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தவறவிட்ட செல்போன்கள் குறித்து காவல் நிலையங்களில் வழக்குகள் அடிப்படையில் உரிய விசாரணை மேற்கொண்டு ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான விலை உயர்ந்த 120 செல்போன்கள் காவல்துறை அதிகாரிகள் மூலமாக மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட செல்போன்கள் அனைத்தும் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் நடைபெற்று. அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது..

மேலும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் செல்போன் தவறவிட்டாலோ, அல்லது திருடப்பட்டாலோ அது குறித்து உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் சென்று புகார் அளிக்க முன் வர வேண்டும். அதேபோல் கடந்த மாதம் மட்டும் வாலாஜாபேட்டையில் செல்போன் தவறவிட்ட வழக்கில் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான 30 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என இந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

Next Story

முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய போலீசார் தீவிரம்!

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
 Police arrest to Former Minister MR Vijayabaskar

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தனது பெயர் சேர்க்கப்படலாம் என்று கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு ஜூன் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது கடுமையான விவாதங்களுக்கு பிறகு மூன்று தரப்பு வாதங்களைக் கேட்ட மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் ஜூன் 25 ஆம் தேதிக்கு மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தார்.

இதனையடுத்து நில அபகரிப்பு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய வடமாநிலங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். வட மாநிலங்களுக்கு எம்.ஆர். விஜயபாஸ்கர் தப்பிச் சென்றதாக கூறப்படும் நிலையில் சிபிசிஐடி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.