Skip to main content

கோடநாடு வீடியோ விவகாரம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

 

ss

 

கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஏற்கனவே சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். கடந்த திங்கள்கிழமை இவர்கள் இருவரும் ஆஜராகியிருந்தபோது அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப இயலாது என்று எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்தது, மேலும் முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு கேள்விகள் இருப்பதால் காவல்துறை அதற்கு சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.  ஆனால், காவல்துறை முறையான விளக்கம் அளிக்காததால், சயான் மற்றும் மனோஜ் இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது. அப்போது அவர்களுக்கு 10,000 ரூபாய் பிணைத்தொகையாய் செலுத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை இவர்கள் இருவரும் எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்