Skip to main content

மகளுக்கு தீ வைத்துவிட்டு தனக்கும் தீ வைத்துக் கொண்ட தாய்

Published on 01/06/2023 | Edited on 01/06/2023

 

kanchipuram kundrathur differently abled girl child and her mother incident

 

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அடுத்த மாங்காடு பகுதியில் உள்ள கொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன். தச்சர் வேலை செய்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா (வயது 48) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு தினேஷ்குமார் (வயது 23) என்ற மகனும், செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (வயது 18) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் செல்விக்கு மன வளர்ச்சி மற்றும் அந்த வயதுக்கு உரிய உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்து வந்துள்ளார்.  இதனால் அவரது தாய் சுலோச்சனா, செல்வியை உடன் இருந்து கவனித்து அவரது தேவையை பூர்த்தி செய்து வந்தார்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் கணவர் நடராஜன் மற்றும் அவரது மகன் தினேஷ்குமார் ஆகிய இருவரும் வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டனர். அப்போது வீட்டில் சுலோச்சனாவும் அவரது மகள் செல்வியும் இருந்துள்ளனர். அன்றைய தினம் இரவு சுலோச்சனா திடீரென தனது உடலிலும், மகள் செல்வி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இருவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது இருவரின் உடலிலும் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உட்புறமாக தாழிடப்பட்ட கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்தனர். மேலும் அவர்கள் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

அங்கு சிகிச்சை பெற்று வந்த சுலோச்சனா நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மகள் செல்வி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி குறைந்த தனது மகளை தனக்கு பின்னால் யார் கவனித்துக் கொள்வது என்ற கவலையில் சுலோச்சனா இருந்து வந்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் சுலோச்சனா இந்த விபரீத முடிவெடுத்தது தெரியவந்துள்ளது. மனவளர்ச்சி குன்றிய மகளுக்குத் தீ வைத்து விட்டு தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும்  ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.