Skip to main content

மாணவர்களே படியுங்கள் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னதுண்டா? ராமதாசுக்கு ஞானமூர்த்தி கேள்வி

Published on 20/09/2019 | Edited on 20/09/2019

 

குரு நினைவு மண்டப விழாவில் பேசிய ராமதாஸ் குருவை திமுக கொலை செய்ய முயற்சித்தது என குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பதில் அளித்து செந்துறை (வடக்கு) திமுக. ஒன்றியச் செயலாளர் மு. ஞானமூர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 


 

mg



அதில், காடுவெட்டி குருவை கொலை செய்ய திமுக முயன்றது என ஒரு பெரும் பழியை சுமத்தியுள்ள மருத்துவர் அய்யாவே! உங்கள் கடந்த கால வரலாற்றை கொஞ்சம் நினைத்து பாருங்கள். வ. ச. பேச்சாளர் ஏழுமலை கொல்லப்பட்டது யாராலே? வல்லம் அறிவழகன் கொல்லப்பட்டது யாராலே? பெரியதத்தூர் வெங்கடேசன் கொல்லப்பட்டது யாராலே? இப்போது சட்ட அமைச்சராக இருக்கிறாரே சிவி சண்முகம் உறவினர் கொல்லப்பட்டது யாராலே? இன்றைய சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றது யார்? அவர் மயிர் இழையில் உயிர் பிழைத்தது எப்படி?


 உடையார் பாளையம் வன்னிய அடிகளார் என்கிற யு. எஸ். இராமமூர்த்தி தாக்கப்பட்டது  யாராலே? பண்ருட்டி ராமச்சந்திரன் கார் தாக்கப்பட்டது யாராலே? ஏ கே நடராஜன் தாக்கப்பட்டது யாராலே? உங்களை உலகறியச் செய்த வாழப்பாடியாரை வஞ்சகத்தால் வீழ்த்தியது யாரய்யா? பேராசிரியர் தீரன் தாக்கப்பட்டது யாராலே? காட்டகரம் வேங்கைப்புலியன் தாக்கப்பட்டது யாராலே? விழுப்புரம் பாலசண்முகம் தாக்கப்பட்டது யாராலே? ஜெயங்கொண்டம் வழக்கறிஞர் இராமலிங்கம் தாக்கப்பட்டது யாராலே?...இப்படி வன்னியர்களை அழிக்கவே வன்னியர் சங்கமா?....பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. 


 

ஒரு சாதியின் தலைவர் தன் சாதி மக்களையே அழித்தது எந்த சாதியில்? இன்றைக்கும் தன் சாதி இளைஞர்கள் படித்துவிடக்கூடாது, அவன் வாழ்க்கையை வளப்படுத்திவிடக்  கூடாது என்பதில் தந்தையும் , மகனும் தளராமல் சாதி வெறியை ஊட்டி வன்முறையாளர்களாகவே மாற்ற முயற்ச்சித்து வருவது அனைவருக்கும் தெரியும். 
 

உங்கள் கட்சி  அல்லது சங்கத்தின் மூலம் ஏதாவது ஒரு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி இருக்கிறீர்களா? அப்படி நடத்தி இதுவரை எத்தனை இளைஞர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்? 
 

எந்தக்கூட்டத்திலாவது வன்னிய இளைஞர்கள் குடிக்ககூடாது, குடிக்கின்ற இளைஞர்களுக்கு சங்கத்திலோ, கட்சியிலோ இடமில்லை என சொன்னதுண்டா? என்றைக்காவது மாணவர்களே, இளைஞர்களே முதலில் படியுங்கள், முன்னேறுங்கள் பிறகு அரசியலுக்கு வாருங்கள் என்று சொன்னதுண்டா?
 

 சிறுவயதில் பேனாவை எடு எழுது, படி என சொல்வதை விட்டுவிட்டு வீச்சறிவாளையும் அதன் நுணியில் இரத்தம் சொட்டுவதைப்போலவும் படம் போட்டு டீ-சட் கொடுக்கிறீர்களே இதுவா சாதியை நல்வழிப்படுத்துவது. வன்னியர்களுக்கு அக்கினி குண்டம்தானே போடவேண்டும். வீச்சறிவாள் எதற்க்காக. இன்றைய இளைஞர்களை கொலைவழக்குகளில் தள்ளிவிடவா? 
 

விஞ்ஞானம், கணினி என வளர்ந்துவரும் இந்தக் காலத்தில், கற்கால காட்டுமிறாண்டி காலத்திற்கு இளைஞர்களை இட்டுச் செல்லலாமா? 10 வயது இருக்கும்போதே அவன் பிங்சு மனதில் சாதி வெறி என்னும் நஞ்சை ஊட்டி அவன் வாழ்க்கையையே இருண்ட சுடுகாடாக மற்றுவதுதான் மாற்றம்! முன்னேற்றமா? அன்புமணி. மத்தியில் மந்திரிகளாக இருந்தீர்களே எத்தனை வன்னிய இளைஞர்களுக்கு நீங்கள் வைத்திருந்த மருத்துவ இலாக்காவில் வேலை கொடுத்தீர்கள்? 
 

இரயில்வே துறை , சுரங்கத்துறை உங்கள் கையிலே இருந்ததே அந்த காலகட்டத்தில் வடநாட்டினர் தானே வேலையில் சேர்ந்தனர். நீங்கள் எத்தனை வன்னிய இளைஞர்களுக்கு 
வேலை கொடுத்தீர்கள். 
 

மத்திய சுகாதாரத்துறை உங்கள் மகன் அன்புமணி தானே வைத்திருந்தார் எத்தனை வன்னிய மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்டு இலவசமாக கொடுத்தார். உங்கள் கோட்டாவில் வந்த சீட்டைகூட காசுக்குதானே விற்றீர்கள். 


 

திண்டிவனம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வன்னியர்களிடம் வசூல் செய்து கல்லூரி கட்டியிருக்கிறீர்களே அங்கே எத்தனை வன்னிய இளைஞர்கள் இலவசமாக படிக்கிறார்கள். எத்தனை வன்னியர்களுக்கு வேலை கொடுத்து இருக்கிரீர்கள். அந்தக்கல்லூரிக்கும் உங்கள் துணைவி சரஸ்வதி அம்மையாருக்கும் என்ன சம்பந்தம்.  கல்லூரிக்கு அவர்கள் பெயரை வைத்திருக்கிறீர்களே இதுதான் பொதுத் தொண்டா?
 

 தேர்தல் வந்தால் வன்னியர் ஓட்டு வேண்டும், பதவி வந்தால் வன்னியர் நோட்டு வேண்டும், இதுதான் உங்கள் தாரக தந்திரமா? அய்யா மருத்துவரே மல்லாந்து உமிழ வேண்டாம்! இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.