Skip to main content

மாண்டஸ் கரையைக் கடக்க 3 மணி நேரமாகும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

கத

 

தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து தென்கிழக்கில் 70 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் சென்னையை நோக்கித் தொடர்ந்து நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

புயலானது அதிகாலை 3  மணிக்குள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் காலதாமதமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக புயலின் கண் பகுதி இன்னும் மூன்று மணி நேரத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் சென்னையில் முக்கிய இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதே போல மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது; இதன் காரணமாக அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

சாலைகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுக் கிடக்க வாய்ப்புள்ளதால் வெளியே உள்ளவர்கள் பத்திரமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் கடுமையாக உள்ளது. இதற்கிடையே கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்