Skip to main content

அமைச்சர் மனுவால் தட்டிய விவகாரம்! - பா.ஜ.க. நடத்திய போராட்டம்!

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

 

விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில், தன்னுடைய தாயாருக்கு முதியோர் உதவித்தொகை கேட்டு மனு அளிக்க வந்திருந்தார் கலாவதி. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு தூரத்து உறவினரான கலாவதி மனு அளித்தபோது, ‘பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்’ என கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூறியும், சொன்னதையே திரும்பத்திரும்பத் தெலுங்கில் சொன்னபடியே இருந்தார். உறவினர் என்ற வகையில் தன் வீட்டுக்கெல்லாம் வரும் கலாவதியின் இந்தச் செயல் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு எரிச்சலூட்ட,‘அதான்.. பார்த்துப் பண்ணிருவோம்னு சொல்லுறேன்ல..’ என்று உரிமையுடன் அந்த மனுவாலேயே கலாவதியின் தலையில் தட்டினார். 

 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

இந்தக் காட்சியை செல்போனில் பதிவுசெய்த யாரோ ஒருவர், ‘மனு அளிக்க வந்த பெண்ணை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அடித்தார்’ என்று வலைத்தளத்தில் பரப்பி வைரலாக்கிவிட, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ‘மக்கள் என்ன உங்கள் அடிமைகளா?’ எனக் கேள்வி எழுப்பி ‘அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சர் பதவி விலகவேண்டும். அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம்.’ என ட்விட்டரில் தெரிவித்தார். 

 

அந்தக் கால அரசியல்வாதியான கே.கே.எஸ்.எஸ்.ஆர்., எந்தக் கூட்டத்திலும் கட்சித் தொண்டரின் பெயரைச் சொல்லி அழைப்பது, தொண்டனோ, பொதுஜனமோ தோளில் கைபோட்டு பேசுவது, உரிமையுடன் செல்லமாகத் திட்டுவதையெல்லாம், தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து கடைப்பிடித்து, யாருடைய மனதிலும் எளிதாக இடம்பிடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டவர். கலாவதி தூரத்து உறவினர் என்ற உரிமையில், தான் மனுவால் தலையில் தட்டியதைப்போய் அரசியலாக்குகிறார்களே என்று ஆதங்கப்பட்டார். 

The issue knocked by Minister Manu!- Fake BJP. The struggle!

கலாவதியும் மீடியாக்களிடம் “அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். எனக்கு அண்ணன் முறை. அவர் என்னை அடிக்கவில்லை. நான் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.” என்று அடித்ததாகக் கிளம்பிய விவகாரத்துக்கு விளக்கம் தந்து முற்றுப்புள்ளி வைத்தார். 

 

ஆனாலும், அறிவித்தபடி முற்றுகைப் போராட்டம் தொடரும் என பா.ஜ.க. வம்புக்கு நின்றது. விருதுநகர் ராமமூர்த்தி சாலையிலுள்ள அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வீட்டு முன்பாக பா.ஜ.க.வினர் கூடுவார்கள் என்பதை அறிந்திருந்த காவல்துறை, நகரின் பல்வேறு பகுதிகளையும் கண்காணித்தது. ராமமூர்த்தி சாலையிலுள்ள பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் முன்பாக பாஜகவினர் திரண்டு அமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சித்தபோது, காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைதுசெய்த காவல்துறை, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

 

எந்த ஒரு விவகாரத்தையும் அரசியலாக்கியே தீருவது என்ற பா.ஜ.க.வின் இந்த நிலைப்பாட்டால், விருதுநகரில் தற்காலிகமாக போக்குவரத்தை காவல்துறை மாற்றியமைக்க, பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் சிரமத்துக்கு ஆளானார்கள்.  

 

சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யார் மீதும் எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. சம்பந்தப்பட்டவரே, ‘அமைச்சர் எனக்கு அண்ணன் உறவுமுறை. அவர் எங்கே என்னை அடித்தார்?’ என்று விளக்கம் தந்தும், ‘அதெல்லாம் ஏற்கமுடியாது’ எனத்  தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளப் போலியாக ஒரு போராட்டத்தை பா.ஜ.க.வினர் பட்டவர்த்தனமாக நடத்தியுள்ளனர்.  

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.