Skip to main content

இந்தியா-அமெரிக்கா அரசியலமைப்பு விவாத போட்டிக்கான இறுதி போட்டியில் 4 பேர் தேர்வு!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

சென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விவாத மேடை நிகழ்ச்சி நடத்தியது.

சென்னை புதுச்சேரி தவிர்த்து மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று இந்தியா அமெரிக்கா அரசியல் அமைப்பு சட்டங்களை ஒப்பிட்டுப் பேசினார்.

 

 India-US Constitutional Debate Competition

 

இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற 8 மாணவர்கள் ஒரே சட்டத்தை ஒட்டியும் வெட்டியும் பேசினர். ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி ஜெய் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் கீதா ராஜா நங்கவரம் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக ஒருவரான சென்னை அமெரிக்க தூதரக கலாச்சார விவகாரத்துறை அலுவலர் மவுலிக் பெர்கானா கூறுகையில் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகள் தங்கள் ஜனநாயக எண்ணிக்கையை எண்ணத்தை தயக்கமின்றி பிரதிபலிக்க இந்த விவாத மேடை பயனுள்ளதாக இருந்தது.

இந்தியாவும் அமெரிக்காவும் ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் அதீத நம்பிக்கை பெற்றுள்ள நாடுகள் திருச்சியில் நடந்த இறுதி சுற்றில் தேர்வு செய்யப்பட்ட நான்கு மாணவ மாணவிகள் செப்டம்பர் 16ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். 

இந்தப் போட்டியில் என்.ஐ.டியை சார்ந்த பாலா ஆதித்யா சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தை சார்ந்த விக்னேஷ் ஹரிஹரன் ஜீமானா தேசிய சட்டக் கல்லூரியில் சேர்ந்த தேவதிப்தா ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்