Published on 02/06/2020 | Edited on 02/06/2020
திருப்பத்தூர் காந்திநகரில் கடன் தொல்லையால் அண்ணாமலை என்பவர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் அண்ணாமலையின் மகள் ரேணுகா உயிரிழந்தார். அண்ணாமலை, அவரது மனைவி சாந்தி, மற்றொரு மகள் வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடனை கேட்டு மிரட்டிய புகாரில் ரமேஷ், கோவிந்தன் ஆகியோரை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.