Skip to main content

சினிமா பார்க்க சென்ற குடும்பத்தினர் மீது தாக்குதல்; போராட்டத்திற்கு தயாராகும் சமூகநல அமைப்புகள்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

incident on the family who went to the cinema Protest against the police

 

சிதம்பரம் நகரில் திரையரங்கிற்கு வெள்ளிக்கிழமை இரவு சினிமா பார்க்கச் சென்ற குடும்பத்தினரை, திரையரங்கு ஊழியர்கள் தாக்கியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊழியர்கள் 4 பேரை கைது செய்தனர்.

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அய்யாசாமி மகன் சிரஞ்சீவி (29) மற்றும் அவரது அண்ணன் பழனிசாமி மற்றும் ராமராஜன், பானுமதி, லட்சுமி, குழந்தைகள் கார்த்திகேயன், சந்தோஷினி ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணி காட்சி சிதம்பரம் வடுகநாதன் தியேட்டரில் சினிமா பார்க்க சென்றுள்ளனர்.

 

அப்போது டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே சென்ற பொழுது அங்குள்ள ஊழியர்கள் சிரஞ்சீவி என்பவரை நீ குடித்து இருக்கிறாயா என்று கேட்டுள்ளார்கள். எங்கள் குடும்பத்தில் யாருக்கும் குடிப்பழக்கம் இல்லை என்றும், நீங்கள் தான் குடித்து உள்ளீர்கள் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திரையரங்கு ஊழியர்கள் அரவிந்தன்,  சுகந்தன்,  ராகுல்,  மாதவன் உள்ளிட்டோர்  சேர்ந்து சீரஞ்சிவி அவரது அண்ணன் பழனிசாமி, ராமராஜன் ஆகியோரை இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கியுள்ளனர்.

 

இதில் படுகாயமடைந்த சிரஞ்சீவி, பழனிசாமி, ராமராஜன்  ஆகியோர் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிரஞ்சீவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டுள்ளது. இது குறித்து சிரஞ்சீவி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிதம்பரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுகுந்தன் (22), மேல வன்னியூர் விளத்தூர் கிராமம் மேட்டு தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ராகுல் (22), சிவபுரி வடபாதியைச் சேர்ந்த குணசேகரன் மகன் அரவிந்தன் (38), புளியங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த தமிழ்மாறன் மகன் மாதவன் (22) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் ஆர்.சுகுந்தன் மற்றும் ஆர்.ராகுல், மாதவன், அரவிந்தன்  4 பேரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

இந்த நிலையில், அந்த திரையரங்கு உரிமையாளர் சுப்பையா, தமிழ்நாடு திரைப்படத் துறையில் உயர் பதவியில் உள்ளதால் அவர் அழுத்தத்தின் காரணமாக காவல்துறையின் உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் சிதம்பரம் காவல் துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பாமலேயே  நேற்று (18-11-23) இரவு 11 மணிக்கு வெளியே விட்டு விட்டனர். இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

 

இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காவல்துறையின் இந்த செயலுக்கு கடுமையாக கண்டனங்களை தெரிவித்து, நகர செயலாளர் ராஜா, மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு சமூக நல அமைப்புகள், சிதம்பரம் நகர காவல் துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.