Skip to main content

முதல்வர் வருகைக்காக பழமையான ஆலமரங்கள் வெட்டி அகற்றமா..? கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்!

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

INCIDEDNT IN PUDUKOTTAI

 

கரோனா தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பல கட்ட ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு, தற்போது தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று வருகிறார். இந்தச் சுற்றுப்பயணம், அரசு செலவில் ஏற்பாடாகி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எதிர்வரும் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதர உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் தான், அவர் வந்து செல்லும் சாலையை மறுமராமத்து செய்யத் தொடங்கியுள்ளனர். அதேபோல அனைத்துத் துறையும் அவசரகதியில் கோப்புகளைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் முதல்வர் வருகைக்காக சாலை ஓரத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மரங்களை அகற்றி வருகின்றனர். விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் வீரடிப்பட்டி ஊராட்சியில் உள்ள தாண்டீஸ்வரம் கிராமத்தில், சாலையின் தூரத்தில் நின்ற பழமையான 3 ஆலமரங்களை, வேகமாக வெட்டி பொக்கலின் மூலம் லாரியில் ஏற்றிச் சென்றுள்ளனர். இப்படி மாவட்டத்தில் எத்தனை மரங்களைக் கொன்று முதல்வரை வரவேற்கப் போகிறார்களோ என அப்பகுதி வாழ் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்..

 

INCIDEDNT IN PUDUKOTTAI


இது குறித்து மரங்களின் மரங்களின் மீது காதல் கொண்ட இயற்கை ஆர்வலர்கள் கூறும் போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை ஓரங்களில் மரங்கள் அதிகமாக இருந்தது. ஆனால் கடந்த 2018 இல், தாக்கிய 'கஜா' புயல் அத்தனை மரங்களையும் அடியோடு சாய்த்துவிட்டது. அப்படியும் ஆங்காங்கே பழமையான மரங்கள் நிலைத்து நின்றது. சாலையோரம் இருக்கும் சாய்ந்த மரங்களை மீட்க, நெடுஞ்சாலைத்துறை மூலம் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். பல இடங்களில் பராமரிப்பின்றி கன்றுகள் கருகிப் போனது. இப்படி நிலைத்து நின்ற மரங்களையும் முதல்வர் வருகையைக் காரணம் காட்டி, வெட்டி அகற்றுவது பெரும் வேதனையாக உள்ளது. மரங்களை வளர்க்க இன்று சின்னக்குழந்தைகள் கூட முனைப்புக் காட்டும் போது வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றலாமா?
 

Ad

 

விராலிமலை தொகுதி எம்.எல்.ஏவும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், உயிர் மரங்களை வெட்டினால் வழக்குப் பதிவு செய்து நடடிக்கை எடுக்கப்படும் என்று 'கஜா' புயல் நேரத்தில் சொன்னதோடு பலர் மீது வழக்கும் பதிய வைத்தார். ஆனால், அவரது தொகுதியிலேயே முதல்வரின் பெயரால் மரங்கள் வெட்டப்படுவது அமைச்சருக்குத் தெரியாமல் இருக்குமா என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி- சட்டக்கல்லூரி மாணவர் கைது

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Law college student arrested for fraud of getting a job in the Secretariat

தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் நடந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சன்னதிவயல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் சத்யராஜ் (37). தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் செய்யும் ஊழியராக உள்ளார். இவர் கடந்த 25 அம் தேதி அறந்தாங்கி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில் 'நான் அரிமளம் பகுதிக்கு சென்றிருந்த போது மீனாட்சிபுரம் ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கார்த்திக் அறிமுகமானார். தான் சென்னை செட்டியார் சட்டக்கல்லூரி மாணவர் என்றும் சோசியல் மீடியாவில் நிறைய பதிவுகள் போடுவேன். எனக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் நல்ல பழக்கம் உள்ளது என்றும் சொன்னார்.

அதன் பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தலைமை செயலகத்தில் யாருக்காவது வேலை வேண்டும் என்றால் சொல்லுங்கள் வாங்கித் தருகிறேன் என்றார். அப்போது எனக்கே வேலை வேண்டும் என்றேன். அதற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றார். நானும் அவர் சொன்னதை நம்பி நான் சேமித்து வைத்திருந்த பணம் ரூ.1 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்துவதாக சொன்ன போது வேண்டாம் நேரில் வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னவர் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கார்த்திக் புதுக்கோட்டை வந்திருப்பதாக தெரிந்தது. நானும் என் நண்பன் பாலகிருஷ்ணனும் அன்று மாலை புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சந்தித்து முதல் தவணையாக ரூ.1 லட்சம் பணமாக கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டவர் மீதி ரூ.2 லட்சத்தை ரெடி பண்ணுங்க என்று சொல்லிவிட்டு போனார்.

அதன் பிறகு வேலை என்னாச்சு என்று கேட்க பலமுறை அவரை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று (ஏப்ரல் 25 ஆம் தேதி) அறந்தாங்கி எம்ஜிஆர் சிலை அருகே நான் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு நபர் என்னிடம் நங்கள் தான் சத்திரயாரஜா என்று கேட்டவர் கார்த்திக் உங்களிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லிவிட்டு அவரது செல்போனில் வாட்ஸ் அப் காலில் கார்த்திக்கிடம் பேசச் சொன்னார். அப்போது ஏன் என் போனை எடுக்கவில்லை. என் வேலை, பணம் என்னாச்சு என்று கேட்ட போது, உன் பணம் வெளியில் கொடுத்துவிட்டேன். இனிமேல் பணமும் இல்லை, வேலையும் இல்லை என்று சொன்னதோடு இனிமேல் பணம் கேட்டால் எனக்குத் தெரிந்த காரைக்குடி ரவுடிகளை வைத்து உன்னை தீர்த்துக்கட்டிவிடுனே் என்று கொலை மிரட்டல் செய்ததோடு தகாத வார்த்தைகளிலும் பேசிவிட்டு போனை நிறுத்திவிட்டார். என்னிடம் போனைக் கொடுத்த நபரும் என்னை மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

எனக்கு தலைமைச் செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் பணமும் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டு என்னையும் என் குடும்பத்தையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து என் பணத்தையும் மீட்டுத் தர வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த அறந்தாங்கி காவல் ஆய்வாளர் கருணாகரன் தனிப்படை அமைத்து வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த சட்டக்கல்லூரி மாணவர் கார்த்திக்கை சென்னையில் கைது செய்து அறந்தாங்கி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். மேலும் விசாரனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சென்னை முதல் அறந்தாங்கி வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.