Skip to main content

ஹோட்டல் உரிமையாளரை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர்! சாலை மறியலில் குதித்த பொதுமக்கள்!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

திண்டுக்கல் அருகே ஓட்டல் உரிமையாளரை தாக்கியதாக கூறி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் குதித்தனர்.

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே ஹோட்டல் உரிமையாளரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர் தாக்கியதாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

 

திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு அகரம் பிரிவில் ஹோட்டல் நடத்தி வருபவர் ஜோசப். நேற்று மதியம் இவர் தனது ஓட்டல் முன்பு அமர்ந்து நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட தாடிக்கொம்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சேகர், ஜோசப்பை அழைத்து விசாரணை நடத்தினார். பின்னர் அவரை சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தரக்குறைவாக பேசியதுடன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

 

மேலும் ஜோசப்பை தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று எச்சரித்து அனுப்பி இருக்கிறார். இதற்கிடையே சப் இன்ஸ்பெக்டர் சேகர் தாக்கியதால் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறி திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோசப் சிகிச்சை பெற்றார். அதன் பின்னர் வீடு திரும்பிய அவர் தனது உறவினர்களிடம் நடந்த விஷயத்தைத் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஜோசப்பை தாக்கிய சப் இன்ஸ்பெக்டர் சேகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அகரம் கருங்கல்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

திண்டுக்கல் போலீஸ் துணை சூப்ரண்ட் வினோத், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதைத் தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் ஜோசப் மற்றும் அவருடைய உறவினர்கள் சிலர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோத் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

http://onelink.to/nknapp

 

அப்போது சப்- இன்ஸ்பெக்டர் சேகர் மீது ஜோசப் புகார் அளித்தார். அதனைப் பெற்றுக் கொண்ட போலீஸ் துணை சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதியளித்ததைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். இச்சம்பவம் தாடிக்கொம்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.