Skip to main content

அடுத்த 24 மணிநேரத்தில் மின்னலுடன் கூடிய கனமழை! - மூன்று மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

heavy rains regional meteorological centre

 

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் லேசான மழையும், தென்கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேபோல் நாளை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், புதுச்சேரி, காரைக்காலில் கனமழை பொழிய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சிலப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்