Skip to main content

8 மாவட்டங்களுக்கு மழை அலர்ட் 

Published on 17/06/2025 | Edited on 17/06/2025
Rain alert for 8 districts

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெளியான அறிவிப்பின்படி  கோவை, தேனி, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களிலும், அதேபோல் திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மொத்தம் எட்டு மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழைப்பொழிவு காரணமாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம்  85.98 அடியாக உள்ளது. நீர் இருப்பு 19.06 டிஎம்சி ஆக உள்ளது. நீர்வரத்து 8,976 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 655 கனஅடியாக உள்ளது. 

சார்ந்த செய்திகள்