Skip to main content

மருத்துவ மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கிய அமைச்சர் (படங்கள்)

Published on 22/02/2023 | Edited on 22/02/2023

 

சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று (22.02.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மருத்துவக் கல்லூரிகளில் 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் 7.5 % இட ஒதுக்கீட்டின் மூலம் பயனடைந்த மாணவர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு துறை உயரதிகாரிகள் மற்றும் மருத்துவ மாணவ மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்