Skip to main content

“விறகு அடுப்பை நோக்கி பெண்களை விரட்டும் அரசு..” - திமுக போராட்டத்தில் வேலு பேச்சு

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

gas cylinder price hike dmk demand government to take action

 

இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100, சில மாநிலங்களில் இதையும் தாண்டிவிட்டது. சமையல் எரிவாயு விலையும் இந்த மாதம் மட்டும் 70 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்துக்கான டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே கரோனாவால் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. தொழில்கள் நசிந்துள்ளன, மக்களிடம் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களான காய்கனிகள், மளிகை பொருட்கள் விலையும் கிடுகிடுவென உயர்ந்து, நடுத்தர மக்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழை மக்கள் ஒருவேளை உணவையே சரியாக சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

மத்தியில் ஆளும் பாஜக அரசின் பொருளாதார கொள்கையால்தான் இந்த விலை உயர்வு என்றும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் விலைவாசி உயர்வைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி பிப்ரவரி 22ஆம் தேதி போராட்டங்கள் நடைபெற்றன.

 

திருவண்ணாமலையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாண்டி வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து கலந்துகொண்டனர். வரலாறு காணாத அளவில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்தும், அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத மத்தியில் ஆளும் பாஜக அரசையும், மாநில ஆளும் அதிமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். விலையைக் குறைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
 

gas cylinder price hike dmk demand government to take action

 

இதுகுறித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக மா.செ வேலு பேசும்போது, “கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொண்டே வருகின்றனது மத்திய – மாநில அரசுகள். இதனால் நாம் வாங்கும் பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், கத்தரிக்காய், தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்துகொண்டே இருக்கின்றன.

 

ஏழை மக்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் ஒருவேளை சாப்பாட்டைக் கூட சரியாக சாப்பிட முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவனால் கூட வீட்டுக்கு மளிகை பொருளை வாங்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் மத்தியில் ஆளும் பாஜக அரசும், அடிமையாக கிடக்கும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசும்தான்.

 

நம் வீட்டுப் பெண்கள் விறகு அடுப்பில் சமைத்து கண் எரிச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள். அவர்களால் படிக்க முடியவில்லை. வேலைக்குச் செல்ல முடியவில்லை. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது என்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்த மறைந்த தலைவர் கலைஞர், முதல்வராக இருந்தபோது, இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கினார். அந்த எரிவாயு விலையும் உயர்ந்துகொண்டே வந்து இப்போது, 800 ரூபாய்க்கு விற்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள். இதனால் நம் பெண்கள் மீண்டும் விறகு அடுப்புக்கு மாறும் நிலையை இந்த ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டார்கள். மக்களாகிய நீங்கள் இந்த ஆட்சியாளர்கள் பற்றி உணர வேண்டும். மக்களுக்கான அரசாக என்றும் திமுகவே நிற்கும்” என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.