Skip to main content

நான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்!!

Published on 17/07/2019 | Edited on 17/07/2019

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் காணாமல் போன நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு சிறுவன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டு உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அந்த கொலை சம்பவத்தில்  பெற்ற தாயே மகனை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. 

Four year old boy attack with stone...police arrest mother


தேனி மாவட்டம் கோம்பை அடுத்த உத்தமபாளையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மனைவி கீதா. இருவருக்கும் திருமண வாழ்வில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 4 வயதில் ஹரிஷ் என்ற மகன் இருக்கிறான். கீதாவின் பெற்றோர் வீட்டில் தங்கி பள்ளியில் படித்து வந்தான் ஹரிஷ். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தெருவில் விளையாடிக்கொண்டிருந்த ஹரிஷ் வீடு திரும்பாததால் கீதாவின் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் மகனை தேடி பார்த்துவிட்டு கடைசியில் கிடைக்கவில்லை என்பதனால் தேனி மாவட்டம் கோம்பை காவல்துறையில் புகார் அளித்தனர்.

 

Four year old boy attack with stone...police arrest mother

 

Four year old boy attack with stone...police arrest mother

இந்தநிலையில் அந்த ஊரில் ஒதுக்குபுறமாக உள்ள மயானம் அருகே நான்கு வயது சிறுவன் ஹரிஷ் முகத்தில் கற்களால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக போலீசார் விசாரித்தபொழுதும் மர்மம் விளங்காமலே இருந்தது. ஆனால் இறுதியில் தாய் கீதாவே கொலைக்கு உடந்தையாக இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Four year old boy attack with stone...police arrest mother


கீதா கணவனை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்துவந்த நிலையில் அவருக்கும் அதேபகுதியை சேர்ந்த உதயன் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர். இவர்களின் திருமண வாழ்க்கைக்கு முதல் கணவருக்கு பிறந்த மகனான ஹரிஷ் தடையாக இருப்பான் என கீதா தனது தங்கையான புவனேஸ்வரியிடம் கூறியநிலையில் இதை புவனேஸ்வரி அவரது கணவனான கார்த்தியிடம் கூறியுள்ளார். இதனால் சிறுவன் ஹரிஷை கொலைசெய்ய திட்டமிட்ட கார்த்திக் அவனை மயானத்திற்கு அழைத்து சென்று கல்லால் அடித்துக்கொலை செய்துள்ளான்.

Four year old boy attack with stone...police arrest mother


கொலை செய்யும் போது யாரேனும் மயானத்திற்குள் வருகிறார்களா என தகவல் கொடுக்க சித்தி புவனேஸ்வரி வெளியே காவல்காத்து நின்றுள்ளார். இப்படி திட்டமிட்டு கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாதவர்கள் போல் காவல்நிலையத்தில் சிறுவனை காணவில்லை என புகாரும் கொடுத்துள்ளனர். தற்போது தாய் கீதா, அவரது தங்கை புவனேஸ்வரி, உதயன், கார்த்திக் என நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சிறுவன் ஹரிஷை கொலை செய்ய கார்த்திக் அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியில் சிறுவன் ஹரிஸ் அடுத்தநொடி நாம் கொலையாக போகிறோம் என தெரியாமல் கார்த்திக்கின் கையை பிடித்துக்கொண்டு வெகுளியாக நடந்துபோகும் காட்சிகள் யார் மனதையும் உருக்கும்.  

 

 

சார்ந்த செய்திகள்