Skip to main content

முருகனின் தந்தை மறைவு... கண்ணீரில் முருகனும், நளினியும்!

Published on 27/04/2020 | Edited on 27/04/2020

 

former prime minister rajiv gandhi case murugan father

காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவரும், இந்தியாவின் முன்னாள் பிரதமருமான ராஜிவ்காந்தி படுகொலையில் இலங்கை தமிழர்கள், தமிழக தமிழர்கள் என பலர் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் நீதிமன்றத்தில் 7 பேரை தவிர மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர். அதில் குறிப்பிடதக்கவர் முருகன். விடுதலைப்புலிகள் இயக்கத்தில், உளவுத்துறையில் பணியாற்றியவர் என வழக்கு தொடுத்தது இந்திய சிபிஐ. அதில் தூக்குதண்டனை கிடைத்து 28 வருட சிறையில் இருந்தபடி நீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தில் இரண்டு ஆண்டுக்கு முன்பு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டு இப்போதும் சிறையிலேயே உள்ளனர்.


இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து, சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச சிறை நிர்வாகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி பல கைதிகள் பேசி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் உள்ள முருகன், இலங்கை யாழ்பாணத்தில் உள்ள தனது தந்தை வெற்றிவேல், புற்றுநோய் தாக்கியுள்ளதால் உடலுக்கு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் இன்றோ, நாளையோ இறக்கும் நிலையில் உள்ளார். அவருடன் வீடியோ காலில் பேச அனுமதிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார். 

அதனை சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து, தனது வழக்கறிஞர் புகழேந்தி மூலமாக, அரசுக்கு கடிதம் எழுதவைத்தார். முருகனின் தந்தை மிக மிக ஆபத்தான கட்டத்தில் உள்ளார். ஒரே ஒருமுறை வீடியோ காலில் தனது தந்தையின் முகத்தை பார்க்க அல்லது பேச முருகனை அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வேண்டுக்கோள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 26- ஆம் தேதி முருகனின் தந்தை வெற்றிவேல், யாழ்ப்பாணத்தில் மரணத்தை தழுவினார். இந்த தகவல் சிறையில் உள்ள முருகனுக்கு முறைப்படி அனுப்பியுள்ளனர். இது முருகனுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைக் கேட்டு முருகன் கதறி அழுதுள்ளார். இந்த தகவல் முருகன் மனைவி நளினிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள நளினி, தனது மாமனார் இறந்ததை கேள்விப்பட்டு தனது அறையில் இருந்து வெளியே வராமல் அழுதுள்ளார்.

உயிருடன் இருந்தபோதுதான் அனுமதிக்கவில்லை. மறைந்த அவரது முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கவாவது அனுமதிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார். தமிழ் உணர்வாளர்களும் அதே கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.