Skip to main content

அரிசி, பருப்பு வாங்கவே ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்.. பரிதவிப்பில் மலை மக்கள்!

Published on 12/10/2019 | Edited on 12/10/2019

ஈரோடு மாவட்டத்தின் மேற்கு பகுதியில் சத்தியமங்கலம் மலை பகுதியும் வடக்கு பகுதியில் அந்தியூர் மலை காடுகளும் உள்ளது. சந்தன வீரப்பன் உலாவிய இந்த மலையின் நீளம் இரண்டாயிரம் சதுர கிலோமீட்டர். இதில் நூற்றுக்கணக்கான குக்கிராமங்களும் ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களும் வசிக்கிறார்கள் அப்படியுள்ளதுதான்.

அந்தியூர் மலைப்பகுதியில் உள்ள பர்கூர் மலை, பர்கூர் மேற்கு மலைப்பகுதியில்  ஒன்னகரை, தம்புரெட்டி, ஒசூர், கோயில் நத்தம், செங்குளம், சின்ன செங்குளம், கொங்காடை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் இருக்கிறது.  இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவு பொருள், மருத்துவ வசதிக்கு கீழ் பகுதியான அந்தியூர் தான் செல்ல வேண்டும் அடர்ந்த வனப்பகுதி குக்கிராமத்திலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து தாமரைக்கரை என்ற இடத்தில்  பஸ் ஏறி அந்தியூர் சென்று வந்தனர்.  தங்களது கிராமத்திற்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என சென்ற  ஐம்பது ஆண்டுகளாக அரசு நிர்வாகத்திடம்  வலியுறுத்தி கேட்டார்கள். பல போராட்டங்களும் நடத்தினார்கள் சென்ற ஆண்டு மக்கள் கோரிக்கையை ஏற்று  அரசு பஸ் இக்கிராமங்களுக்கு  இயக்கப்பட்டது. 

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

இது மலைவாழ் மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமைந்தது.  இந்த நிலையில் தாமரைக்கரை கிராமத்திலிருந்து தாளகரை கிராமம் பிரிவு வரை 15  இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் வேலை  கடந்த  8 மாதமாக  நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமான பணிகள் நடைபெறுமிடத்தில் சாலைகள்  மிகவும் குறுகலாகவும், குண்டும் குழியுமாக இருப்பதால் இதில்  அடிக்கடி வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதற்கிடையே  சென்ற பத்து நாட்களுக்கு முன்பு பர்கூர் மேற்கு மலைக்கு சென்று வரும் வந்த அரசு பஸ் பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் சேற்றில் சிக்கி கொண்டது. இதை காரணம் காட்டி மேற்கு மலைக்கு பஸ்  இயக்கப்படுவதை நிறுத்திக் கொண்டது அரசு போக்குவரத்து கழகம் இதனால் பத்து மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பழையபடி 25 கிலோ மீட்டர் நடந்து தாமரை கரை வந்து பஸ் பிடித்து அந்தியூர் போவதும் பிறகு மீண்டும் 25  கிலோ மீட்டர் தூரம் அடர்ந்த வனப்பகுதியில் நடந்து தங்கள் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

 Fifty kilometers walk to buy rice and legumes ..

 

மலைப்பகுதியில் ஆங்காங்கே சிறுபாலங்கள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெறாமல் தாமதமான  நிலையில் நடந்து வருகின்றது. தற்போது மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் உள்ள மண் சாலையில் சிறு வாகனங்கள் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வருகின்றது. இதனால் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேறு வழியின்றி மலைவாழ் மக்கள் நடந்து தான் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரிசி பருப்பு வாங்க கூட ஐம்பது கிலோ மீட்டர் நடக்கனும்ங்க முதியோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற கர்பிணி பெண்களை  தொட்டில் கட்டி காட்டுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய கொடுமைங்க.. அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட்டால் பத்து நாளில் மீதி உள்ள பணிகளை முடித்து பஸ் விட முடியும் ஆனால் கேட்பது மலை வாசி மக்கள் என்பதால் யாரும் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்கிறாங்க" என பரிதாபமாக கூறுகிறார்கள் அப்பாவி மலை வாசிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.