Skip to main content

நாகையில் தீபாவளிக்காக வேகமெடுக்கும் மது கடத்தல்!

Published on 16/10/2019 | Edited on 16/10/2019

தீபாவளியை முன்னிட்டு காரைக்காலில் இருந்து கள்ள மதுபாட்டில்கள் கடத்தலை துவங்கியிருக்கின்றனர் கடத்தல்காரர்கள், இதற்கு நாகை மாவட்ட எல்லையோர காவல்துறை அதிகாரிகளும், மதுவிலக்கு பிரிவு உயர் அதிகாரி ஒருவரும் உதவியாக இருப்பதாக பிடிபட்டிருக்கும் கள்ளச்சாராய கடத்தல்காரர்கள் கூறுகின்றனர்.
 

fake liqours found


வரும் 27 ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது. இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளிக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் வேலைப்பார்ப்பவர்கள் கூட வீட்டிற்கு வந்து குடும்பத்தினரோடு குதுகலமாக கொண்டாடுவார்கள், தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு கள்ளச்சாராய  வியாபாரம் படு ஸ்பீடாக இருக்கும். பல ஆயிரம் கோடிகளுக்கு குவித்துவிடுவார்கள் கள்ளச்சாராய விற்பனையாளர்களும், உற்பத்தியாளர்களும்.

தீபாவளிக்கு விற்பனை செய்வதற்கான மதுபாட்டில்களை தீபாவளி நெருக்கத்தில் அவ்வளவு எளிதாக கடத்திவிட முடியாது என்பதையும், தீபாவளி சமயத்தில் பல இடங்களில் சோதனைகள் நடக்கும் என்பதாலும் முன்கூட்டியே கடத்த நாகை மாவட்ட மதுவிலக்கு பிரிவு உயர்அதிகாரி ஒருவரின் தகவல் படி பத்து நாட்களுக்கு முன்பிலிருந்தே மது கடத்தல் வேலைகளை தொடங்கி விட்டனர் என்கிறார் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கள்ளச்சாராய வியாபாரி.

இது குறித்து அவரிடமே விசாரித்தோம், " காரைக்காலில் குவாட்டர் ஒரு பாட்டில் 50 ரூபாய் அதே பாட்டில் தீபாவளி சமயத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகை,பெரம்பலூர், அரியலூர், திருச்சியில் 150 ரூபாய் வரை விற்பனையாகும். அதோடு ஸ்பிரிட் பவுடரும், மதுபாட்டில்களும், ஸ்டிக்கர்களும் காரைக்காலில் ஹோல்சேலாக கிடைக்கிறது. அதையும் வாங்கி சென்று மது பாட்டில்களை சொந்தமாகவே தயாரித்து விற்பனை செய்வார்கள். இதில் தான் கொள்ளை லாபம், ஆனால் அதை குடிப்பவருக்கு பெருத்த நஷ்டம், சீக்கிரமே குடல் அரித்துவிடும்.

மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு காவல்நிலையத்திற்கு உட்பட்ட கடலங்குடியில், நாகை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சாமிநாதனின் அருளாசியோடும், மணல்மேடு காவல்துறை இன்ஸ்பெக்டர் தியாகராஜனின் ஆதரவோடு பொதுமக்கள் நடமாட்டமில்லாத வயல்களுக்கு நடுவில் மோட்டார் கொட்டகையில் ஸ்பிரிட் வாங்கிவந்து கள்ளச்சாராயத்தை உற்பத்திசெய்கின்றனர். அங்கிருந்து சுற்றுவட்டாரத்தில் 50 கிலோமீட்டர் வரை அவர்கள் சப்ளை செய்கின்றன. மதுவிலக்கு டிஎஸ்பிக்கும், இன்ஸ்பெக்டருக்கும் வாரம் ஞாயிற்றுக்கிழமை வருகிறதோ இல்லையோ, இவர்களின் பணமும் நல்ல கிடாகுட்டியின் கரியும் மறக்காமல் போய்விடும்.

இது வழக்கமானது, தற்போது தீபாவளி சமயம் என்பதால் அந்தசமயத்தில் கடத்த முடியாது என காவல்துறையினரே தகவல் கொடுப்பாங்க. இந்த ஆண்டும் அப்படி தகவல் கொடுத்திருக்கிறதா எனக்கு பழைய நன்பர்கள் சொல்கிறார்கள். இந்த ஐந்து நாட்களில் காரைக்காலில் இருந்து கடத்தப்படும் சரக்கு நாகை மாவட்டத்தை தாண்டி தான் மற்ற மாவட்டங்களுக்கு போகமுடியும், அந்த மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சாமிநாதனுக்கு காரைக்கால் மொத்த வியாபாரிகளின் தொடர்பு இருக்கும், அவர்கள் மூலம் எங்கிருந்து எவ்வளவு சரக்கு போகிறது, எந்த வழியா போகிறது, கார்நம்பர், கடத்துபவர் நம்பர் வரை வாங்கிக்கொண்டு வசூல் வேட்டையை செய்வார். முரண்டு பிடிப்பவர்களையும், புதிதாக தீபாவளிக்காக வருபவர்களையும் பிடித்து வழக்கு போட்டு பிடித்து வருவதாக கணக்கு காட்டிடுவார்,  பழைய ஆளுங்களுக்கு, வாடிக்கையாளர்களுக்கு எந்த வழியாக போகனும், எந்த வழியா வரனும்னு யோசனை கொடுத்துடுவாங்க. மற்றபடி விற்பனை நடக்கும் உள்ளூர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு வார மாமூல் கொடுத்துடுவாங்க. தீபாவளிக்குள் மதுவிலக்கு டிஎஸ்பிக்கு மட்டுமே பல லட்சம் வசூலாகிடும்." என்கிறார்


அவர் சொன்னது போலவே இன்று அடுத்ததுடுத்து மன்னார்குடியிலும், மயிலாடுதுறை அருகே உள்ள அரும்பாக்கத்திலும் பிடிபட்டுள்ளனர், அவர்கள் காவல்துறையினரிடம், தீபாவளி விற்பனைக்காக கடத்தியதாக கூறியுள்ளனர்.

இது உண்மையா என மதுவிலக்கு டி,எஸ்,பி சாமிநாதனிடமே கேட்டோம், "யாரோ எனக்கு வேண்டாதவங்க கிளப்பிவிடுற செய்திங்க, இப்ப உள்ள எஸ்.பி கடுமையா இருப்பதோடு, தனி டீம் போட்டு பிடிக்கவச்சிருக்கோம், இதுவரை பத்துக்கும் மேற்பட்ட கார், முன்னூருக்கும் அதிகமான டூவிலர்களை சரக்கோடு பிடிச்சி வழக்குப் போட்டுள்ளோம்,  இப்ப குறிப்பிட்டுள்ள இடங்கள் ரொம்ப இன்டீரியல் ஏரியா உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்கிறார் விவரமாக.

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளச்சாராய விற்பனை வீடியோ வெளியாகிப் பரபரப்பு; கேள்வியெழுப்பும் சமூக ஆர்வலர்கள்

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A video of the sale of counterfeit liquor has been released and there is a stir; Questioning Social Activists

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது. அவ்வப்போது காவல்துறையினர் மலைப்பகுதிகளுக்கு சென்று கள்ளச்சாராயம் காய்ச்சப்படும் இடங்களைக் கண்டறிந்து கள்ளச் சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர். இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது.

மலையில் இருந்து கொண்டு வரப்படும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உதயேந்திரம், சி.விபட்டறை, மேட்டுப்பாளையம், கிரிசமுத்திரம்  தும்பேரி, தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வாணியம்பாடி நகரின் மையப்பகுதியான வாரச்சந்தை மைதானம், பேருந்து நிலையத்தின் பின்புறம், புதூர் ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு, பகலாக 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இதேபோல் ஆம்பூர் அடுத்த உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதிகளில் ஆடு மேய்ப்பது போலும், விறகு எடுப்பவர்கள் போலும் ஆண் பெண் என இருபாலரும் கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு மதுபாட்டிலை விட கள்ளச்சாராயம் குறைந்த விலையில் கிடைப்பதால், வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக  ஏராளமானோர்,  இருசக்கர வாகனங்கள் மூலம்  கள்ளச்சாராய விற்பனை செய்யும் இடங்களுக்கு படையெடுக்கின்றனர். வாணியம்பாடி பாலாற்றில் திறந்த வெளியில்  பட்டப் பகலில்  கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் அதனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வாங்கி செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடியில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறை அலுவலகம்  இயங்கி வருகிறது. ஆனால்  வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 24 மணி நேரமும் நடக்கும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாதாமாதம் லட்சங்களில் மாமூல் வாங்கிக் கொண்டு எஸ்பி அலுவலகம் வரை பங்கு தந்துவருவதால் கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில்லை. பெயருக்கு மாத கணக்கு காட்ட வேண்டும் என வழக்கு மட்டும் பதிவு செய்து அவர்களை முன் ஜாமீனில் வெளியே விடுகின்றனர். இதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை முற்றிலும் கள்ளச் சாராயத்திற்கு அடிமையாகி வரும் சூழல் தொடர்ந்து வருகிறது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள்  தனிப்படை அமைத்து கள்ளச் சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.