Skip to main content

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் யானை வேட்டை... இருவர் கைது!

Published on 05/02/2022 | Edited on 05/02/2022

 

 Elephant hunting at rabbit hunt ... Two arrested!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் ஆண்யானை வேட்டையாடப்பட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது ஆண் யானையைச் சுட்டுக் கொன்ற இருவரை வனத்துறை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் அருகிலுள்ள அஞ்செட்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆண் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயன் மற்றும் வனத்துறையினர் யானை இறந்து கிடந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்து  யானையின் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்திருந்தனர்.

 

உயிரிழந்து கிடந்த யானையின் தந்தம் நீக்கப்பட்டிருந்தது. எனவே தந்தத்திற்காக யானை கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதேசமயம் ஆண் யானையின் உடற்கூறாய்வு அறிக்கைக்கு  வனத்துறையினர் காத்திருந்த நிலையில், யானையின் உடலில் குண்டுகள் பாய்ந்து இருப்பது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

 

இதனால் ஆண் யானை வேட்டையாடப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் விசாரணையை வனத்துறையினர் தீவிரப்படுத்தி இருந்தனர். இந்தநிலையில் அஞ்செட்டி அருகே உள்ள ஏழுமலை முத்தன பள்ளியைச் சேர்ந்த முத்து, ஏழுமலையான் தொட்டியை சேர்ந்த காளியப்பன் ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் முயல் வேட்டையாட வனப்பகுதிக்குச் சென்றதாகவும், அப்போது ஒற்றை காட்டு யானை தங்களை விரட்டியதாகவும் அதனால் யானையிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

இருவரையும் கைது செய்த வனத்துறையினர் யானையைக் கொல்ல பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கியைப் பறிமுதல் செய்ததோடு அவர்களிடமிருந்து வெடிமருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் சதீஷ் மற்றொரு நபரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து யானை தந்தமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விலங்குகளைச் சிதைக்கும் அவுட்டுக் காய்; 2 பேர் கைது

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Out Kai, which destroys animals; 2 arrested

சத்தியமங்கலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 10 (வெடிக்கும்) அவுட்டுக் காய்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீசார் புளியங் கோம்பை, காசிக்காடு, வடக்கு பேட்டை ஆகிய பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் கம்பத்ராயன் புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் திருமான்(60) எனத் தெரிய வந்தது. மேலும் அவர்கள் இருவரும் வனவிலங்குகளை வேட்டையாட அவுட்டுக் காய்களைப் பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திருமான் வீட்டின் பின்பகுதியில் உள்ள முட்புதரில் பத்து அவுட்டுக்காய்கள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில், திருமான் இருவரையும் கைது செய்தனர். மேலும் 10 அவுட்டுக் காய்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story

நீரிலும் பலத்தை உறுதி செய்த யானைகள்

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Elephants proved their strength in water

வனப்பகுதிகளிலும் நிலப்பரப்பிலும் கம்பீரத் தோற்றமும், ஆளுமையும் கொண்ட விலங்காக திகழும் யானைகள் கூட்டம் கூட்டமாக ஆற்றைக் கடந்து செல்லும் அழகான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிலப்பரப்பிலும் வனப்பகுதியிலும் வாழ்ந்து வரும் யானைகள் அதன் பலத்தை நீரிலும் காட்ட முடியும் என உறுதி செய்துள்ளது அண்மையில் வெளியான ஒரு வீடியோ காட்சி. அசாமில் உள்ள பிரம்ம புத்திரா ஆற்றில் யானைகள் கூட்டமாக ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்திய படியும், தும்பிக்கையை உயர்த்தி நடந்த படியும் கூட்டமாக கடக்கும் மெய்சிலிர்க்கும் காட்சிகள் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.