Skip to main content

பீகாரில் காணாமல் போன சிறுமி சென்னையில் 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம்...தீவிர தேடுதலில் போலீசார்!!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

பீகார் மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 15 வயதுடைய சிறுமியை சென்னை போலீசார் உதவியுடன் பாட்னா போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீகார் மாநிலம் பாட்னாவில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சஜாதா காதுன் என்ற 15 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் திடீரென காணாமல் போனார். பள்ளிக்குச் சென்ற சிறுமி திரும்பி வராததால் அச்சமடைந்த அச்சிறுமியின் பெற்றோர்கள் பாட்னா போலீசில் புகாரளிக்க போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் காணாமல் போன அந்தச் சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த மனிஷா குமாரி என்ற 18 வயது இளம்பெண் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

kidnap


அதனையடுத்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து பாட்னா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் மனிஷா குமாரி சிக்கினார். அந்த ரயிலில்  பயணசீட்டு இன்றி பயணித்த பொழுது பயணச்சீட்டு பரிசோதகரிடம் சிக்கினார் மனிஷா. பரிசோதகர் பயணசீட்டு எடுக்காததால் போலீசில் பிடித்து தருவதாக கூற அதற்கு பயந்த மனிஷா அவரிடமிருந்து தப்பிக்க ரயில் மெதுவாக சென்ற தருணத்தில் அவரின் கவனத்தை திசைதிருப்பி ரயிலில் இருந்து எகிறி குதித்துள்ளார். இதனால் மனிஷா குமாரிக்கு சிறிது காயம் ஏற்பட்டதால் அவர் மீட்கப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காயமடைந்த மனிஷா குமாரியை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

kidnap


விசாரணையில் அந்தப் பெண் வெறும் 400 ரூபாய்க்கு அந்த சிறுமியை விற்பனை செய்ததை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை கேட்டு அதிர்ந்த போலீசார் சிறுமி யாரிடம் விற்கப்பட்டது என தீவிரமாக அவரிடம் விசாரித்தனர். சிறுமியை ஏமாற்றி செகந்திராபாத் அழைத்து வந்த மனிஷாகுமாரி அங்கு வைத்து பிரகாஷ் யாதவ் என்பவனிடம் 400 ரூபாய்க்கு விற்றுவிட்டு பின்னர் பாட்னா திரும்புவதற்காக ரயிலில் பாட்னா திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் டிக்கெட் பரிசோதகரிடம் மாட்டிக்கொண்டு ரயிலில் இருந்து கீழே குதித்து இறுதியில் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

kidnap


இதையடுத்து செகந்திராபாத் சென்ற பாட்னா போலீசார் அங்கு விசாரணை நடத்தியதில் பிரகாஷ் யாதவ் சிறுமியை சென்னை அழைத்து சென்றது தெரியவந்தது. சென்னை போலீசாரின் உதவியை நாடியது பாட்னா போலீஸ்.

மனிஷா குமாரியிடமிருந்து சிறுமியை பெற்ற பிரகாஷ் யாதவின் செல்போன் எண்ணை பெற்று அதனை வைத்து விசாரணை மேற்கொண்ட குற்றவியல் தடுப்பு பிரிவு போலீசார் பிரகாஷ் யாதவ் பெரம்பூரில் இருப்பதை கண்டறித்தனர். இதனையடுத்து தமிழக போலீசாரின் உதவியுடன் பாட்னா போலீசார் பெரம்பூரில் வைத்து பிரகாஷ் யாதவை  கைது செய்தனர்.

 

kidnap


கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்திவரப்பட்ட சிறுமியை அன்சாரி என்பவரிடம் ஒப்படைத்ததாக அவன் தெரிவித்துள்ளான். ஆனால் அன்சாரி அதன் பின்னர் அந்த சிறுமியை என்ன செய்தான்,எங்குள்ளான் என்பது குறித்தும் தெரியாது என அவன் கூறியுள்ளான். இந்த நிலையில் கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோரும், பாட்னா போலீசாரின் ஒரு குழுவினரும் சென்னையில் முகாமிட்டு சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர். அதேபோல் போலீசாரின் மற்றொரு குழுவினர் கைது செய்யப்பட்ட பிரகாஷ் யாதவை  பாட்னா அழைத்துச் சென்று அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.