Skip to main content

மின்வாரிய ஊழியர் கொலை... முதல் மனைவியிடம் விசாரணை... மகன்கள் சிறையில் அடைப்பு

Published on 24/05/2020 | Edited on 24/05/2020

 

 

Electricity Employee



இரவு பணி பார்த்த மின்சார வாரிய ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக அவரது முதல்தாரத்து மனைவி மற்றும் மகன்களிடம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

அரியலூர் மாவட்டம், த.கீழவெளி கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் கனகசபை (வயது50). இவர் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் மின் பாதை ஆய்வாளராக (லைன் இன்ஸ்பெக்டர்) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு முதல் தாரத்தில் அஞ்சம்மாள் (வயது 48) என்ற மனைவியும், இவர்களுக்கு கமலாதேவி (வயது 31) என்ற மகளும், கலைச்செல்வம் (வயது 27), கலைவாணன் (வயது 23) என்ற மகன்களும் உள்ளனர். இதில் கமலாதேவிக்கு திருமணமாகிவிட்டது.  
 

மகளுக்கு திருமணமானவுடன் கனகசபை அவர்களை விட்டு பிரிந்து வந்து திருமானூர் அருகேயுள்ள அன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த, சங்கீதா(வயது 34) என்பவரை திருமணம் செய்து கொண்டு, திருமழபாடி கிராமத்தில் சொந்தமாக வீடுகட்டி சுமார் பதினைந்து வருடங்களுக்கு மேலாக அங்கே தங்கியுள்ளார். கனகசபைக்கும், சங்கீதாவிற்கும், தினகரன்(வயது 19), தினேஷ்குமார்(வயது 15) என்ற மகன்களும், திவ்யா( வயது 17) என்ற மகளும் உள்ளனர். கனகசபை திருமழபாடியிலிருந்து தினமும் கீழப்பழுவூருக்கு துணை மின் நிலையத்திற்கு பணிக்கு சென்று வருகிறார். முதல் மனைவி அஞ்சம்மாள் குடும்பத்தினருக்கும், கனகசபைக்கும் ஏதோ முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
 

இந்நிலையில் 18ந் தேதி இரவு 7 மணியளவில் கனகசபை இரவுப் பணிக்காக கீழப்பழுவூர் துணை மின் நிலையத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இரவு சுமார் 12 மணி வரை கனகசபை தூங்காமல் பீடர் பிரேக்கர் ரீடிங் எடுத்துக்கொண்டு  இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் 19 ந்தேதி காலை டியூட்டி மாற்ற வந்த, மற்றொரு மின் பாதை ஆய்வாளர் ஆங்கியனூரைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 48), காலை 5.50 மணியளவில் துணை மின் நிலையத்திற்கு வந்து அலுவலக கட்டிடத்திற்கு சென்று உள்ளே பார்த்த போது கனகசபை கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பதறிப் போன செல்வக்குமார் தனது உயரதிகாரிகளுக்கும், கீழப்பழுவூர் போலிசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
 

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன், துணை கண்காணிப்பாளர் திருமேனி, மற்றும் கீழப்பழுவூர் போலிசார் வந்தனர். கொலை நடந்த இடத்தை பார்வையிட்டனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து கை ரேகைகளை பதிவு செய்துள்ளனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது துணை மின் நிலைய வளாகத்தை சுற்றி வந்து நின்றது. மேலும், திருமானூர் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலிசார் கொலை செய்யப்பட்ட கனகசபை உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக கீழப்பழுவூர் போலிசார், கொலை செய்யப்பட்ட கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாள், மகன்கள் கலைச்செல்வம், கலைவாணன் ஆகியோரிடமும், மேலும் இந்த கொலையில் ௯லிப்படைக்கு ஏதும் தொடர்பு உள்ளதா என கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Electricity Employee sons


 

கனகசபையின் இரண்டாவது மனைவி சங்கீதா கொடுத்த புகாரின் பேரில், கீழப்பழுவூர் போலீஸார் மின் ஊழியர் கனகசபை கொலை தொடர்பாக விசாரனை மேற்கொண்டனர். விசாரனையில், கனகசபை முதல் மனைவி அஞ்சம்மாளுக்கு, சொத்து, பணம் ஏதும் தரவில்லை என்றும், அதற்காக ஜீவனாம்சம் கேட்டு அஞ்சம்மாள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடந்து வருவதும் தெரியவந்தது.  இதனால் ஆத்திரமடைந்த அஞ்சம்மாளின் மகன்களான கலைச்செல்வம்(27) மற்றும் கலைவாணன்(22) ஆகியோர் சேர்ந்து தந்தையை கொலை செய்ய முடிவு செய்தனர். இதற்காக பல மாதங்களாக காத்திருந்த அவர்கள், கனகசபைக்கு இரவு பணி எப்போது வரும் உடன் யாரும் பணியாற்றுகிறார்களா என நோட்டமிட்டும் வந்துள்ளனர்.
 

ல



இந்நிலையில் கடந்த 18-ம் தேதி நள்ளிரவு கீழப்பழுவூரில் உள்ள துணை மின்நிலையத்துக்கு கனகசபை பணிக்கு சென்று, அங்கு அவர் பணியிலிருந்த போது, அவருடன் பணியில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு கனகசபையின் கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, கனகசபையை கொலை செய்த அவரது மகன்கள் இருவரையும் கீழப்பழுவூர் போலீஸார் கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சொத்துக்காக தனது தந்தையையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்