Skip to main content

மாசடையும் அடையாறு..! கண்டுகொள்ளாத அதிகாரிகள் ..!

Published on 25/09/2018 | Edited on 25/09/2018

 

environment

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் ஆரம்பித்து திருநீர்மலை, அனகாபுத்தூர், மணப்பாக்கம், சைதாபேட்டை, கோட்டூர்புரம், பட்டிணம்பாக்கத்தில் கடலில் கலக்கும் அடையாறு சென்னையை ஒட்டியுள்ள முக்கியபாசன நீர் ஆதாரமாகவும் விளங்கிவந்தது தற்போது அது மாசடைந்ததால் கூவம்ஆற்றுக்கு இணையாக சாக்கடையும் கழிவுகளையுமே பாயிகிறது ..! ஆதனூரில் ஆரம்பிக்கும் போது சுத்தமான தண்ணீர் ஆற்றில் ஓடுகிறது இது பெரும்பாலும் மழைகாலத்தில் கரைபிரண்டு ஓடும் ..! திருநீர்மலை, திருமுடிவாக்கம் சிப்கார்ட் கம்பெனி கழிவுகள் அப்படியே கலப்பதும் மேலும் சுற்றுவட்டார பகுதி கழிவுநீர் வண்டி கழிவுகள் கொட்டுவதும், நாகிள்கேணி தோல் கம்பேனி கழிவுகள் என கடலை அடையும்வரை வெறும் கழிவுகளே கலப்பத்தால் ஆறுமாசடைந்து அடையாறு என்பது கழிவுநீர் ஆறாக ஓடுகிறது ..! 

 

environment

 

சமீபத்தில் முடிந்த பிள்ளையார் சத்திக்கு சென்னையில் வைக்கப்பட்ட 2500 சிலைகளையும் கடலில் தான் முறையாக கரைக்க வேண்டும் என்பதை அறிந்தும் சில விஷமிகள் தடையை மீறி பிள்ளையார் சிலைகளை அடையாற்றில் கரைத்தனர் இதனால் ஆற்றுப்படுகை மாசடைவது ஒருபுறமிருக்க சிறுவர்கள் அந்த கழிவுநீரின் தீமை அறியாமல் விளையாடிவருவதையும் பத்துநாட்கள் கழிந்தும் அந்தசிலைகள் கரையாமல் நிர்பதையும் நம் கேமராவில் பதிவு செய்து சைதாபேட்டையில் உள்ள மாசுகட்டுபாடு வாரிய அதிகாரியை அனுகியபோது இதுக்கெல்லாம் காவல்காக்க முடியுமா .. என்ற அலட்சியமான கேள்வியை நம்மையே பார்த்தே கேட்டார் மாசுகட்டுபாடு வாரிய சேர்மேன் சாம்புகலோலிகர் ... அவர்துறையின் வேலை என்னவென்றே தெரியாத துறை சேர்மேன் ..?

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.