ஐம்பொன் சிலைகளை விற்ற வழக்கில் தலைமறைவாக இருந்த டிஎஸ்பி கைது
![](/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/SEPTEMBER/15/Arrest3.jpg)
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து சென்னையில் இருந்த சுப்புராஜை கைது செய்தனர். இதையறிந்த காதர்பாட்சா தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து காதர்பாட்சாவை காவல்துறையினர் சஸ்பெண்ட் செய்து அவரை கடந்த 3 மாதங்களாக தேடி வந்தனர். மேலும் இந்த வழக்கு விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இருந்து, கடந்த 11ம் தேதி கும்பகோணம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் கும்பகோணத்தில் இருந்த காதர்பாட்சாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். வரும் 27ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.