Skip to main content

மது போதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

tt

 

அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் பணிமனையிலிருந்து ஒரு பேருந்து புதுச்சேரி - திருப்பதி இடையே தினசரி இயக்கப்பட்டுவருகிறது. நேற்று முன் தினம் திருப்பதியில் இருந்து புறப்பட்ட அந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் தரனேந்திரன், பேருந்தை ஓட்டி வந்துள்ளார். அந்த பேருந்தில் நடத்துநராக ஹோலி பேஸ் என்பவர் இருந்துள்ளார். 

 

இந்த பேருந்து புறப்பட்டதிலிருந்து மிகவும் மோசமாக இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து ஓட்டுநர் மது போதையில் பேருந்தை இயக்குவதை மக்கள் அறிந்தனர். அதன்பிறகு அவர்கள் நடத்துநரிடம் முறையிட்டுள்ளனர். அதன்பின் ஓட்டுநரை எழுப்பிவிட்டு, நடத்துநரே பேருந்தை வந்தவாசி வரை இயக்கிவந்துள்ளார். 

 

அதற்குமேல், நடத்துநர் பேருந்தை ஓட்டக்கூடாது எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயணிகள் சத்தம் போட்டதோடு அங்கிருந்தபடி போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் வந்தவாசி போலீசார் விரைந்து வந்து ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். 

 

அங்குவந்த அதிகாரிகள், உடனடியாக மாற்று ஓட்டுநரை வர வழைத்து வந்தவாசியிலிருந்து புதுச்சேரிக்கு பேருந்தை இயக்கியுள்ளனர். இது சம்பந்தமாக பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி குடிபோதையில் பேருந்தை இயக்கிய தரநேந்திரன், அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி நடத்துநர் ஹோலி பேஸ் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேருந்துகள் சேதம் குறித்து தொடர் புகார்கள்; போக்குவரத்துத் துறை கெடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
transport department action on Frequent complaints about damage to buses

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து புதிய பேருந்துகளை தமிழ்நாடு அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

அதுமட்டுமல்லாமல், பேருந்துகள் சேதம் குறித்து தொடர்ச்சியாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர் புகார்களை அடுத்து, போக்குவரத்துத் துறை அனைத்து பேருந்துகளுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், ‘48 மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்து குறைகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். அதன் ஆய்வு தொடர்பான அறிக்கையை போக்குவரத்து செயலாளரிடம் சமர்ப்பிக்க மேலாண் இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளது. 

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.