Skip to main content

ரயில்வே வாரிய தலைவரிடம் திண்டுக்கல் எம்.பி. கோரிக்கை மனு! 

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

Dindigul MP gave Request Petition ​​to Railway Board Chairman

 

இந்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் நாடாளுமன்ற திமுக உறுப்பினர் வேலுச்சாமி, நேற்று (21.12.2021) டெல்லியில் உள்ள ரயில்வே துறை வாரியத்தலைவர் சுனீத் சர்மாவை சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். 

 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “கோயம்புத்தூர் முதல் பழனி வழியாக திண்டுக்கல் ரயில் பாதையில் பத்துக்கும் மேற்பட்ட சுரங்கப் பாதைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் விதமாக நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோல், மயிலாடுதுறையில் இருந்து திண்டுக்கல் வரை செல்லும் ரயில் சேவையை செங்கோட்டை வரை நீட்டித்து இயக்க வேண்டும். திண்டுக்கல்லிலிருந்து கோவை வரை பழனி வழியாக பகல் நேர ரயில் இயக்க வேண்டும். இதன்மூலம் பொதுமக்களும் வியாபாரிகளும் பயனடைவார்கள்.

 

கோவை – மதுரை - திருநெல்வேலி வரை கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, பழனி வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரம் முதல் அஜ்மீர் செல்லும் ரயிலை மதுரை வழியாக இயக்க வேண்டும். கோவை - நாகர்கோவில் வரை பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக புதிய பகல் நேர ரயில் இயக்க வேண்டும். கோவை – மதுரை, கோவை – ராமேஸ்வரம், கோவை – தூத்துக்குடி, கோவை - கொல்லம்  ரயில்களைக் கோவையிலிருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல் வழியே செல்லும் அகல ரயில் பாதை வழியாக இயக்க வேண்டும். 

 

கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்களைப் பாலக்காடு கோட்டத்திலிருந்து மதுரை கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். திருநெல்வேலி முதல் தாதர் வரை மதுரை, பழனி, பொள்ளாச்சி, மங்களூர் வழியாக புதிய வாராந்திர ரயில் இயக்க வேண்டும். மதுரை – புனலூர் செல்லும் ரயிலை திண்டுக்கல் வழியாக வேளாங்கன்னி வரை நீட்டிக்க வேண்டும்.

 

கோவை - சென்னை எழும்பூர் வரை போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக புதிய ரயில் இயக்க வேண்டும். பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயிலை போத்தனூர், பொள்ளாச்சி, மதுரை வழியாக கோவை - திருச்செந்தூர் ரயிலாக இயக்க வேண்டும். வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை விரைவு ரயிலை தினசரி இயக்க வேண்டும். சென்னை - ஐதராபாத் செல்லும் ரயிலை திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்.

 

பழனி, ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல், கொடைரோடு ஆகிய ரயில் நிலையங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். பழனியிலிருந்து ஈரோடுக்கு அகல ரயில் பாதை அமைக்க வேண்டும். மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்ல வேண்டும். சத்திரப்பட்டி, ஆயக்குடி, தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நூதன முறையில் வாக்கு சேகரித்த அமைச்சர் ஐ. பெரியசாமி!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Minister I.Periyasamy who collected votes in the traditional manner

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தையொட்டி புறாவை பறக்க விட்டு தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை பெற்று வா என நூதன முறையில் அமைச்சர் ஐ. பெரியசாமி வாக்கு சேகரித்தார். திண்டுக்கல் ஒன்றியம் பள்ளபட்டி ஊராட்சியில் முருகபவனம் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் துவங்கியது. அப்போது அமைச்சர் ஐ. பெரியசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, “மக்கள் பணியே மகேசன் பணி என செயல்படுபவர் தான் சச்சிதானந்தம். நாம் மகத்தான வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைப்போம். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சச்சிதானந்தம் எம்.பி. ஆகிறார்” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

அதை தொடர்ந்து சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் பேசுகையில், “இது புறாவிடு தூது அல்ல... இந்த புறா டெல்லி வரை பறந்து சென்று வரும். புறாவை டெல்லிக்கு அனுப்பி நமது மாநிலத்திற்கான நிதியை பெற்று வருமா? என்பது சந்தேகமே. இருந்தாலும் இந்த புறாவை பறக்க விட்டு நமது பிரச்சாரத்தை துவக்கி வைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி” எனக் கூறினார். 

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.