Skip to main content

நடிகர் சங்கத்தில் திலீப் மீண்டும் சேர்ப்பு - பாவனா ஆதரவாளர்கள் கொதிப்பு

Published on 25/06/2018 | Edited on 25/06/2018
b d

 

நடிகா் சங்க தலைவராக மோகன்லால் தோ்ந்தெடுக்கப்படடாா். இதனை தொடா்ந்து நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகா் திலீப் மீண்டும் சோ்க்கப்பட்டாா்.

 

          மலையாள நடிகா் சங்கம் அம்மா என்ற பெயாில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கடந்த 17 ஆண்டுகளாக நடிகரும் கம்யூனிஸ்ட் எம்.பி யுமான இன்னோசென்ட் இருந்து வந்தாா். இந்த நிலையில் அவருடைய பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் நடிகா் சங்க தோ்தலில் அவா் போட்டியிட போவதில்லை என அறிவித்தாா்.


          இதனை தொடா்ந்து புதிய தலைவருக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டது. இதில் நடிகா் மோகன்லாலை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் மோகன்லால் போட்டியின்றி தோ்வு செய்யும் நிலை ஏற்பட்டது.


              இந்தநிலையில் நேற்று கொச்சியில் நடிகா் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் மோகன்லால் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். செயலாளராக இடைவேளை பாபு, பொருளாளராக ஜெகதீசும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.


               பின்னா் நடந்த கூட்டத்தில் நடிகை பாவனா பாலியியல் வழக்கில் கைது செய்யப்பட்டதால் நடிகா் திலீப் நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாா். தற்போது ஓரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் நடிகா் சங்கத்தில் திலீப் சோ்த்து கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டு தீ்ா்மானம் நிறைவேற்றப்பட்டது.


            அப்போது பேசிய மோகன்லால்....திலீப் பாவனா விவகாரத்தை இங்கு பேசவில்லை. அந்த விவகாரம் வழக்கு சட்டப்படி நடந்து கொணடிருக்கிறது. அந்த விவகாரத்தின் போது திலீப் நடிகா் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டாா். அவா் நீக்கப்படும் போது திலீபிடம் இருந்து எந்த விளக்கம் கேட்காமல் நீக்கப்பட்டாா். ஆனால் அவா் தன்னிடம் இருந்து தன் விளக்கம் கேட்காமலும் அதற்கான காரணத்தை கூறாமலும் நீக்கப்பட்டதற்காக கோா்ட்டுக்கு சென்று இருக்கலாம். 


             ஆனால் அவா் நடிகா் சங்கத்தின் மாண்பையும் மாியாதையும் மதித்து இதுனால் வரையிலும் தன்னை நீக்கப்பட்டதற்காக நடிகா் சங்கத்தை பற்றி எந்த இடத்திலும் ஒரு வாா்த்தை கூட கூறவில்லை. அதை மாியாதையாக இந்த நடிகா் சங்கம் ஏற்று கொண்டு அவரை மீண்டும் சங்கத்தில் இணைக்கிறோம் என்றாா்.


             அப்போது அனைவரும் கைதட்டி அதை ஏற்றுக்கொண்டனா். பாவனா ஆதரவாளர்கள் இதனால் கொதிப்படைந்தனர்.


நேற்று நடந்த நடிகா் சங்க கூட்டத்தில் பாலியியல் சம்பவத்தில் பாவனாவுக்கு ஆதரவாக இருந்த women in cinema collect  நிா்வாகிகளான நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லீங்கல், பாா்வதி ஆகியோா் கலந்து கொள்ளவில்லை.  
                                      

சார்ந்த செய்திகள்

Next Story

“நேர்மையான அரசியல்வாதி” - விஜயகாந்த் குறித்து மோகன்லால்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
mohanlal about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் மம்மூட்டி, “விஜயகாந்த் நம்மோடு இல்லை. அவர் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நடிகர், அற்புதமான மனிதர். அவரது இழப்பு திரையுலகினர், திரையுலக ஆர்வலர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கும் மிக வருத்தமான ஒன்று. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மோகன்லால், “சிறந்த நடிகரும், நேர்மையான அரசியல்வாதியும், கனிவான மனிதருமான விஜயகாந்த் ஆத்மா சாந்தியடையட்டும். அவரது இழப்பின் வலியைப் பகிர்ந்து கொள்ளும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Next Story

சிவகார்த்திகேயன் படத்தில் மோகன்லால்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

mohanlal to act in sivakarthikeyan movie under ar murugadoss direction

 

'மாவீரன்' படத்தைத் தொடர்ந்து, கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரவிகுமார் இயக்கத்தில் ‘அயலான்’ படத்தில் அவர் நடித்துள்ள நிலையில் 2024 பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. 

 

இதையடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்திற்காக கை கோர்த்துள்ளார். இப்படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாகவும் அதற்கான டெஸ்ட்  ஷூட் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

இந்த நிலையில் இப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க, பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வில்லனாகத் துப்பாக்கி படத்தில் மிரட்டிய வித்யுத் ஜாம்வால் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு பான் இந்திய படமாக இப்படம் உருவாகவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிகின்றன.