Skip to main content

போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் டெங்கு கொசுக்கள்..கண்டுகொள்ளாத அரசு!!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவிவருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படியிருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் குழந்தைகள், பெரியவர்கள் என இதுவரை 6 பேருக்கு மேல் இறந்துள்ளனர்.
 

dengue mosquitoes found in  old tyres


அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கடைகள், வீடுகளில் கொசு உற்பத்தியாமல் இருக்கவேண்டும், தங்களது இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதிகாரிகள் கொசு உற்பத்தியாவதை கண்டுபிடித்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம்.

பள்ளிக்கொண்டா அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் டெங்கு கொசு உற்பத்தியாகி ஒரு குழந்தைக்கு டெங்கு வந்து மரணத்தை தழுவியது எனக்கூறி 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் அக்டோபர் 24ந்தேதி வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் பலயிடங்களில் ஆய்வு மேற்க்கொண்டனர். இதில் ரங்காபுரம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்தின் ஒருபகுதியில் 200க்கும் அதிகமான பேருந்து டயர்கள் வைக்கப்பட்டுயிருந்துள்ளன. அதனை ஆய்வு செய்தபோது, அதில் மழை தண்ணீர் தேங்கியிருப்பதும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகியிருப்பதும் அறிந்துக்கொண்டனர். அதேபோல் சத்துவாச்சாரியில் ஒரு தனியார் விடுதியிலும் கொசு உற்பத்தியாவதை கண்டறிந்துள்ளனர். அந்த தனியார் லாட்ஜ்க்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆனால் அதனை விட அதிகமாக கொசு உற்பத்தி செய்த அரசு போக்குவரத்து கழகத்தின் மண்டல அலுவலகத்துக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லையாம் அதிகாரிகள். இதுப்பற்றி அவர்கள் தரப்பில் கூறும்போது, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அனுப்பியுள்ளோம், அவர் உத்தரவிட்டால் உடனே நோட்டீஸ் அனுப்பி, அபராதம் விதிப்போம் எனக்கூறியுள்ளார்கள்.


அரசு அலுவலகத்தில் கொசு உற்பத்தியாவதை கண்டறிந்தும், அதற்கு நோட்டீஸ் வழங்கவே தயங்குவது ஏன் ?. அரசு அலுவலகம் என்றால் அபாயகரமான டெங்கு கொசுவை உற்பத்தி செய்யலாம்மா ?. இப்படியிருந்தால் எப்படி டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும் ?. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை அரசுத்துறையே கேட்கவில்லையென்றால் என்ன அர்த்தம் ?, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள், பொதுமக்கள் மீது மட்டும் ஏன் உடனே அபராதம் விதிக்க வேண்டும் ?. தனியார் அமைப்புகள், நிறுவனங்கள், பொதுமக்கள் என்றால் ஒரு பார்வை, அரசு அலுவலகங்கள் என்றால் ஏன் இன்னொரு பார்வை என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்