Skip to main content

எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சைக்கோக்களால் தமிழத்துக்கே ஆபத்து: ஜெயக்குமார் அதிரடி!

Published on 20/04/2018 | Edited on 20/04/2018


எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சைக்கோக்களால் தமிழத்துக்கே ஆபத்து என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தன் டிவிட்டர் பதிவில் கூறியதாவது, தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே என தெரிவித்திருந்தார்.

இதேபோல், பெண் செய்தியாளர்கள் குறித்து தன் முகநூல் பதிவில் அநாகரிகமாக கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர் பின்னர் பலத்த கண்டனங்கள் எழுந்தததையடுத்து அதனை உடனடியாக நீக்கவிட்டார்.

இந்நிலையில், இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,

எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்ற சைபர் சைக்கோக்களால் தமிழத்துக்கே ஆபத்து. இவர்கள் இருவர் மீதும் பத்திரிகையாளர்கள் புகார் அளிக்க வேண்டும்; புகார் அளித்தால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவர்களின் அவதூறு கருத்துகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வர் குறித்து அவதூறாக பேசிய எச்.ராஜா மீது தமிழக அரசே வழக்கு தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்