Skip to main content

மன்னார்குடியில் வரதட்சணை வாங்கிவராத பெண்ணுக்கு அரிவாள் வெட்டு!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

திருவாரூரில் வரதட்சணைகேட்டு மனைவியையும், குழந்தையையும் அரிவாளால் வெட்டி மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயற்சித்த கணவனிடமிருந்து தப்பி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தது பலரையும் கலங்கடித்துள்ளது.

 

dowry

 

திருவாரூர் வாசன் நகரில் வசித்து வருபவர் கிஷோர்ராஜா(28). இவர் காட்டூர் என்ற இடத்தில் கார் பரிசோதனை மையம் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டும் மன்னார்குடி பைங்காநாடு கிராமத்தை சோ்ந்த ஜெயநந்தினிக்கும் (24) திருமணம் நடைபெற்று 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

 

 

இந்நிலையில் ஜெயநந்தினியை அவரது கணவர் கிஷோர்ராஜா மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனையடுத்து ஜெயநந்தினி பணம் பெறுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தந்தை ஊருக்கு சென்று நேற்று திரும்பி உள்ளார். அவரிடம் கணவனும், மாமியார், மாமனார், நாத்தனார், பணம்  வாங்கிட்டு வந்தாயா என கேட்டுள்ளனர். பணமில்லை என ஜெயநந்தினி நடுங்கிய குரலில் கூற தகாராறு ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் கணவன் கிஷோர்ராஜாவும் தாயார் ராணியும் அரிவாளை கொண்டு ஜெயநந்தினியை வெட்டியுள்ளார். அதோடு கிஷோர்ராஜா குடும்பத்தினர் ஜெயநந்தினி மீதும் குழந்தை மீதும் மண்ணெணெய் ஊற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இந்த கோர சம்பவத்தில் இருந்து தப்பி காயங்களுடன் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தானே அனுமதியாகி உள்ளார்.

 

 

இந்த சம்பவம் குறித்து அறிந்த நகர காவல்துறையினர் மருத்துவக்கல்லூரிக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் ஜெயநந்தினியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வரதட்சனைக்காக தன்னை கொல்ல முயன்றதாகவும் அவர்களிடமிருந்து தப்பி வந்துவிட்டதாகவும் ஜெயநந்தினி செய்தியாளர்களிடம் தொிவித்துள்ளார். திருமணமாகி இரண்டு ஆண்டுகளில் வரதட்சணை கேட்டு கொல்ல முயற்சி நடைபெற்ற சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்