![cuddalore district sipcot plant incident employees funds](http://image.nakkheeran.in/cdn/farfuture/1O37Onow2e2C78koI9KRssBzNVpFRpkq_kK3MTZHDrU/1620964536/sites/default/files/inline-images/cu777.jpg)
கடலூர் சிப்காட் பகுதியில் உள்ள 'கிரிம்சன் ஆர்கானிக்' என்ற கெமிக்கல் தொழிற்சாலையின் இரண்டாவது தளத்தில் நேற்று (13/05/2021) காலை பாய்லர் வெடித்து 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 17 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலங்கள் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தர வலியுறுத்தி தொழிலாளர்களின் உறவினர்கள், அரசியல் கட்சியினர், தொழிற் சங்கத்தினர் ஆகியோர் சடலங்களை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
![cuddalore district sipcot plant incident employees funds](http://image.nakkheeran.in/cdn/farfuture/vqcgTcihiBu1X9iOCK4VaiC8d_BihM4B058X3IwOeoA/1620964581/sites/default/files/inline-images/cudd44%20%281%29.jpg)
இதனிடையே தமிழக அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 3 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில், தொழிற்சாலை நிர்வாகம் சார்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 15 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 10 ஆயிரமும் வழங்க கோட்டாட்சியர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.